Tuesday 18 October 2016

முருங்கை இலையின் இந்த அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பாட்டி வைத்தியங்களில் இருந்து பாக்கியராஜ் படங்கள் வரை முருங்கையின் நன்மைகள் கூறப்படாத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். முருங்கை காய் மட்டும் இன்றி, முருங்கை பூ, முருங்கை இலையிலும் பல அற்புத நன்மைகள் புதைந்திருக்கின்றன. 
 
 
 
 பாட்டி வைத்தியங்களில் மட்டும் இருந்து முருங்கையின் நன்மைகளை இப்போது உலக மருத்துவ ஆய்வாளர்களும் கண்டு வியக்கின்றனர். பார்மசி மற்றும் மருந்து அறிவியல் பத்திரிக்கையில் வந்த ஆய்வறிக்கையில், முருங்கை இலைகள் ஆண்மை அதிகரிக்கவும், தாம்பத்திய செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பெருமளவு உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்மை அதிகரிக்க மட்டுமல்ல, உடல் நலத்தை மேம்படுத்த பல அற்புத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது முருங்கை இலைகள்... 
 
நீரிழிவு!
முருங்கை இல்லை உடலில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு குறைக்கவும், கொலஸ்ட்ரால் குறைக்கவும் முருங்கை இலையை உணவில் சேர்த்து வரலாம். 
 
இதயம்! 
இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது முருங்கை இலைகள். இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நலன் மேலோங்க உதவுகிறது. மேலும், தமனிகள், இரத்த குழாய்கள் வலுவையும் அதிகரிக்கிறது. 
 
மூளை!
முருங்கை இலைகள் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் நியூரோவை மேம்படுத்தி, அதன் ஆக்டிவிட்டிகளுக்கு ஊக்கமளிக்கிறது. அல்சைமர் பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை இலைகள் நல்ல தீர்வளிக்க வல்லது. 
 
கல்லீரல்!
 முருங்கை இலைகள் கல்லீரலை பாதுகாத்து, அதில் நச்சுக்கள் அதிகம் சேராமலும், அதிக அழுத்தம் உண்டாகாமலும் காத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.
 
 எப்படி உட்கொள்ளலாம்! 
முருங்கை இலைகளை நீங்கள் உணவில் சேர்த்து உண்ணலாம், வேக வைத்து சாப்பிடலாம், அல்லது அதை காய வைத்து அரைத்து பானமாக, டீயாக பருகலாம். முருங்கை இலைகள், உடலில் இருந்து நச்சுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலோங்க வைக்கிறது. 
 
இதர நன்மைகள்! 
முருங்கை இலைகள் வாந்தி, மலமிளக்க பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்க வல்லது. முருங்கை ஈர் பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கிறது. மேலும், சரியாக சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்தால், அதை பெருக்க உதவுகிறது.

Monday 17 October 2016

2 கப் பால் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.



இதனால் தினமும் இருவேளை பாலை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் ஒரு கப், இரவு ஒரு கப் வீதம் அருந்தலாம். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. 

இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இப்படி எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதிற்கு மேல் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். 

மேலும் கால்சியம் உடலின் இதர செயல்பாடுகளான தசை சுருக்கம், இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் முக்கியமானது. பாலில் பொட்டாசியம் உள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். இச்சத்தும் தசைகளின் சுருக்கத்திற்கு அவசியமானது.

பாலில் ஏராளமான அளவில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு வேண்டிய 9 வகையான அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் உண்பதைத் தவிர்க்கலாம்.

பலரும் பாலை அதிகம் குடித்தால், அதில் உள்ள கால்சியம் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட பாலை தினமும் குடித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பெருங்குடலை சுத்தம் செய்ய சில இயற்கை வழிமுறைகள்!!!!

வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதி… பெருங்குடல். இந்தப் பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான்.





பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
சில நேரத்தில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். 
கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சானது மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்டவாடை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்னைகள், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
நீர்
பெருங்குடல் சுத்தம், நீங்கள் செய்ய சிறந்த வழி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது இயற்கையான முறையில் உடலில் இருந்து தீங்கு செய்யும் நச்சுகளையும் மற்றும் கழிவுகளையும் வெளியே தள்ளி விடுகிறது.
ஆப்பிள் சாறு
புதிதாக எடுக்கப்பட்ட ஆப்பிள் சாறு பருங்குடலை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும். இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது கல்லீரல் மற்றும் செரிமானத்தையும் சுத்தம் செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் ஆப்பிள் சாறு புதிதாகவும், ஆர்கானிக் ஆப்பிளை தேர்வு செய்வது சிறந்தது. ஆப்பிள் சாறு குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு குவளையில் குடிக்க நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். 
எலுமிச்சை சாறு
எலுமிச்சை ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு நல்லது. எனவே, எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்தம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை சாற்றோடு, கடல் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் கொஞ்சம் தேன் கலந்து. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்பெறமுடியும்.
பச்சை காய்கறி சாறு
புதிய காய்கறி சாறு பல முறை குடிக்க அதாவது பச்சை காய்கறிகள் சாற்றை, குறிப்பதால் நச்சுகளை நீக்க உதவுகிறது. ரெடிமேட் ஜூஸ் குடிப்பதை காட்டிலும் நாம் செய்ய கூடிய சாறு ஆரோக்கியமானதாக இருக்கும்.
நார் சத்து அதிகமுள்ள உணவுகள்
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீங்கு செய்யும் நச்சுகளை பெருங்குடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்கம், மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், நார் அதிகமுள்ள உணவுகளை உணவுக்குழாய் எந்த பிரச்சினையின்றி சத்துக்களை பெற உதவும்.
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளான பட்டாணி, ப்ரோக்கோலி, ஆப்பிள், புதிய காய்கறிகள், புதிய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைய சேர்க்க முடியும். தானியங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அதிக அலவு நார் சத்துக்களை கொண்டிருக்கும்.
தயிர்
தயிர் அஜீரணம், வாய்வு பிரச்சனை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகும்.