Sunday 12 February 2017

குடல் புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் முட்டைகோஸ்!

முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு  விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

 
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால்,  புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால்,  புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது
 
முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட  கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.
 
விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர  உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள துணை செய்கிறது.
 
பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு,  உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
 
விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல்  கொண்டது. முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை  குணமாக்கும்.
 
முட்டைகோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன  மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.

Sunday 5 February 2017

புற்றுநோயில் இருந்து காக்கும் கேரட்

சத்துகள் நிறைந்தது ‘கேரட்’ என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது என்று தற்போது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, கே மற்றும் பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம், தையமின் போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

நமது உடல்நலத்துக்குத் தேவையான சத்துகள் அனைத்தையும் கேரட் கொண்டுள்ளது. எனவே இதை நாம் உணவில் அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சினைகளும் நம்மைத் தாக்காமல் தடுக்கலாம்.

கேரட் அதிகம் சாப்பிட்டால் மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

காரணம், கேரட்டில் பால்கரினால் எனப்படும், புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நமது கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால், இச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.

கேரட்டில் கரோட்டினாய்டு சத்து அதிக அளவில் உள்ளதால், கேரட்டை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதயநோய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

எனவே கேரட்டை தொடர்ந்து தினமும் சாப்பிட்டுவந்தால், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, பக்கவாதம், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பருக்கள் மற்றும் சொத்தைப் பற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று பல ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.