Monday 14 May 2018

புற்றுநோய்…

சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான். ஆனால், இந்த நோயிலிருந்தும், இதனால் ஏற்படும் பயத்திலிருந்தும் விடுபடும் வழியை தருகிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்…

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:


புற்றுநோய் என்றால் என்ன?


உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய்பற்றி அறிந்துகொள்வதற்குமுன் இயல்பாக உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்றுநோய் அணுக்களாக மாறுகிறது என்று பார்ப்போம்!


நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.


எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.


சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.


புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கு காரணம் என்ன?


இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம்.


சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.


நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரிடம் விபரம் தெரிவித்து புற்றுநோய் உங்களுக்கு வரும் வாய்ப்பு குறித்து கலந்தாலோசிக்கவும்.


புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:


உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.


குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு


முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்
நாக்கை அசைப்பதில் சிரமம்


மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும்.


உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்


காரணமில்லாமல் எடை குறைவு


பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு


புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது?


வாயில் தோன்றும் புற்றுநோய்கள்


புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆறாத புண்
கட்டி, தடிப்பு
ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல்


மார்பகப் புற்று நோய்கள்


பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mam­mography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள்


உடலுறவு ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையின் வாயிலில் வரும் புற்று-நோய்க்காக மருத்துவரை அணுகி Pap Smear செய்துகொள்வது நல்லது.


புற்றுநோயைத் தடுக்க முடியுமா?


புற்றுநோயைத் தடுக்க உத்திரவாதமான முறை ஏதும் இல்லை. ஆனால், சரியான வாழ்க்கைமுறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும்.


புகையிலைப் பொருட்களைப் (உதாரணம்: சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப் புண்களின் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


குறைந்த கொழுப்பு, அதிகக் காய்கறி, பழம், முழுமையான தானியங்கள் உட்கொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்தல்.


சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்தல். சூரியக்கதிர் தடுக்கும் களிம்பு (sunscreen lotion) பயன்படுத்துதல் மற்றும் இதற்காகத் தகுந்த உடையணிதல்.
சுத்தமான சூழலில் இருத்தல்
வைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.


புற்றுநோயும் வலியும்:


புற்றுநோய் என்றால் அதிக வலி தரும் நோய் என்று பரவலான கருத்தும் பயமும் உள்ளது. எந்த வகையான புற்றுநோய், எவ்வளவு பரவி உள்ளது, நோயாளியின் பொறுத்துக்கொள்ளும்தன்மை இவற்றைப் பொறுத்து வலியின் அளவு மாறுபடும். வலியைக் கட்டுப்படுத்த தகுந்த மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளும்போது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதுடன் வலி மருந்துகளுக்கு அடிமையாவதையும் தடுக்கலாம்.


புற்றுநோயும் மனச்சோர்வும்:


25% புற்றுநோயாளிகளை மனச்சோர்வு பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வந்துவிட்டால் மனச்சோர்வு அடைவது இயல்பு என்று நினைத்து அதைப்பற்றி மருத்துவருடனோ நெருங்கிய உறவினர்களுடனோ சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும். இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம். நோயாளி மட்டுமின்றி குடும்பத்தாரும் பதட்டம் மற்றும் மனச்சோர்விற்கு ஆளாகலாம். அவர்களும் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


சிகிச்சைமுறைகள்:


உடலில் கட்டி உள்ள இடம், நோய் பரவியுள்ள நிலை, நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது.
மருத்துவர் கீழ்சொன்னவற்றில் ஏதாவது ஒரு முறையில் அல்லது ஏதேனும் இரண்டு முறைகளைக் கலந்து சிகிச்சை அளிப்பார். நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (qual­ity of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.


அறுவைச் சிகிச்சை: இது கட்டியை அகற்றுவதற்காகச் செய்யப்படுவது.
கதிரியக்கச் சிகிச்சை: (Radiotherapy): இந்த சிகிச்சை முறையில் சக்தி வாய்ந்த கதிர் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன.
கீமோதெரபி (chemotherapy): மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாளமில்லாச் சுரப்பிகள் சிகிச்சை: புற்றுநோய் உயிரணுக்கள் நாளமில்லாச் சுரப்பிகளைக்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.


யோகா எவ்வாறு உதவுகிறது?


சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது யோகப் பயிற்சிகள் பெருமளவில் மனச்சோர்வு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுதல் போன்ற நோயின் பக்க விளைவுகளைக் குறைக்கின்றன.


யோகப் பயிற்சிகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் குறிப்பாக நுரையீரல், சிறுநீரகங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வதால், கழிவுப் பொருட்கள் எளிதாக வெளியேற்றப்படுகின்றன.


அண்மையில் புற்றுநோய்க்கான முக்கிய வாய்ப்புகளில் ஒன்றாக உடற்பருமன் கண்டறியப்பட்டுள்ளது. யோகப் பயிற்சிகள் உடல் பருமனைத் தடுக்கிறது.


யோகப் பயிற்சிகளால் தூக்கம் சீராகிறது. தூக்க மாத்திரையின் துணையில்லாமல் எளிதில் அதிக நேரம் தூங்க முடிகிறது.
உடல் எளிதில் சோர்வடைவதைத் தடுக்க முடிகிறது.
யோகப் பயிற்சிகள் மட்டுமின்றி நடத்தல், நீச்சலடித்தல், விளையாடுதல் போன்றவையும் உதவியாக இருக்கும்.
நோயாளிகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து தளர்வு நிலையில் இருக்க முடிகிறது.


புற்றுநோய் பற்றி சத்குரு…


சத்குரு:


நம் நாட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் வேப்பிலையும், மஞ்சளும் நம் உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நீண்ட காலமாகவே நம்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை அவ்வளவு பலன் தராது என்றாலும் அரைத்த மஞ்சள் உருண்டை ஒன்றும் அரைத்த வேப்பிலை உருண்டை ஒன்றும் (கோலிக்குண்டு அளவில்) தினசரி சாப்பிட்டு வரும்போது புற்றுநோய் அணுக்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. மஞ்சள், வேப்பிலையுடன் யோகப் பயிற்சிகளும் தொடர்ந்து செய்துவரும்போது, உடலின் அனைத்துப் பகுதிகளுமே உறுதி பெறுவதால், புற்றுநோய் அணுக்கள், கட்டியாக மாறி நோயாக வெளிப்படும் வாய்ப்பு இல்லாமலே போகிறது.


உங்கள் உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருகிறது. ஏனென்றால், சுற்றுச்சூழல் கேடு, ரசாயனப் பாதிப்புகள், உட்கொள்ளும் உணவு போன்ற பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும் முக்கியக் காரணம், மகிழ்ச்சியற்ற மனிதர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.


மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது. எனவே, ஏதோ காரணங்களால் அவர்கள் உடலில் உள்ள சில உயிரணுக்களும் மகிழ்ச்சியை இழக்கின்றன. அப்போது அவர்களின் உயிரணுக்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.


ஆனால் இந்த உடல் ஏன் தனக்கு எதிராகவே வேலை செய்ய வேண்டும்? நீங்களே உங்களுக்கு எதிராக எப்போதும் வேலை செய்வதை, இந்த உடல் உங்களுடன் வைத்துள்ள அனுபவத்தைக் கொண்டு கவனிக்கிறது. எனவே அதுவும் அதே பாணியைப் பின்பற்றி தனக்கு எதிராகவே வேலை செய்கிறது. உயிரணுக்களின் இந்தச் செயலைத்தான் நீங்கள் புற்றுநோய் என்கிறீர்கள். எனவே அதற்குப் புத்துயிர் ஊட்டுவது அவசியமாகிறது. நமது யோக வகுப்புகள் இதைத்தான் செய்கின்றன. ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் சாம்பவி பயிற்சி இப்பணியைத் திறம்படச் செய்கிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்கள் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்கும்போது ஏழு நாட்கள் வகுப்பின் முடிவிலேயே உடல்நலம் முன்னேற்றத்தை அவர்களால் தெளிவாக உணர முடிகிறது. சில மாதங்கள் பயிற்சிகளுக்குப் பிறகு உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த ஆரோக்கியத்தை உணர்கிறார்கள்.


நோயிலிருந்து குணம் பெற முடியாமல் இறக்க நேரிடுவோம் என்று தெரிந்துவிட்டால்கூட இறப்பை சஞ்சலமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், யோகா என்பது வெறும் பயிற்சி மட்டுமல்ல, உங்களையும் வாழ்க்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவுகிறது!



இரண்டாவது அறிவு நமது உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களும் தம்மைத் தாமே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதுபித்துக் கொள்கின்றன. குடல்கள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறையும் வெள்ளையணுக்கள் 13 நாட்களுக்கு ஒரு முறையும், சிவப்பணுக்கள் 120 நாள், கல்லீரல் 1 வருடம் இவாறாக சாராசரி ஒரு வருடத்தில் அணைத்தது உறுப்புகளும் புதுப்பித்துக் கொள்கின்றன, இந்த உடலில் உறுப்புகள் தம்மைத்தாமே புதுபிக்கும் அறிவு கெட்டுப் போனால் கேன்சர் என்ற நோய் வரும் கேன்சர் என்றால் என்ன? கேன்சர் என்றால் உடலில் உள்ள உறுப்புக்கள் தம்மைத்தாமே புதுப்பிக்கும் அறிவு கெட்டுப்போய்விட்டது என்று பொருள்.


உதாரணமாக இரத்தத்தில் வெள்ளையணுக்கள் 13 நாட்களில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நம் உடலில் ஒரு அறிவு இருக்கும் அந்த அறிவு கேட்டுபோய்விட்டால் 13 நாட்களில் புதுபிக்க வேண்டிய அறிவு தவறுதலாக 330 நாட்களில் புதுப்பிப்பதற்காக அறிவை மாற்றிக் கொண்டால் என்னாகும்? காலதாமதமாகச் சென்று இரத்தத்தில் வெள்ளையனுக்களைப் புதுப்பிக்கும் அப்போது இரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு குறையும் பொதுவாக 4500 லிருந்து 11500 வரை இருக்க வேண்டும் ஆனால் 4500 க்கும் கிழே குறையும் இதற்குப் பெயர் இரத்தப் புற்று நோய். (Blood Cancer).
13 நாட்களில் புதுபிக்க வேண்டிய இரத்தத்தில் வெள்ளையனுக்கள் 13 நாட்கள் என மறந்து 13 நிமிடம் என மாறிவிட்டால் என்ன ஆகும். சீக்கிரம் சீக்கிரம் இரத்தத்தில் வெள்ளையணுக்களை உருவாக்கி கொண்டே இருக்கும். தேவையில்லாமல் அப்போது இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் 11000 என்ற அளவு அதிகமாகி 1 லட்சம் 2 லட்சம் வரை சென்று விடும். இதுவும் இரத்தப் புற்று நோய் என்று பொருள். எனவே இரத்தத்தில் இரத்தப் புற்று நோய் என்பது வெள்ளை அணுக்களைப் புதுப்பிக்கும் அறிவை உடல் இழந்து விட்டது என்று அர்த்தம். எனவே உடலில் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் புதுபிக்கும் அறிவை கொடுப்பதன் மூலமே மட்டுமே இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியுமே தவிர ஹீமோதெரப்பியின் மூலம் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அதிகமாக இருந்தால் குறைப்பதும், குறைவாக இருந்தால் அதிகரிப்பதும் என்று கண்ட்ரோல் செய்தால் இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியாது நோயின் அளவு அதிகம் தான் ஆகும்.   


எலும்பில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களைப் புதுப்பிக்க வேண்டும் அப்படிக் குறிப்பிட்ட நாட்களில் புதுப்பிக்காமல் கால தாமதமாக புதுப்பித்தால் செல்கள் அழுகிப் போகும். குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரம் புதுப்பித்தால் அந்த எலும்பு வீங்கிப் போகும் இதற்குப் பெயர் எலும்புப் புற்று நோய்(Bone Cancer).
இப்படி நமது உடலில் எல்லா உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நாளில் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. இப்படிக் குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் காலதாமதமாக புதுப்பித்தாலே அல்லது மறந்து போனாலோ அதற்குப் பெயர் கேன்சர்.


செல்கள் புதுப்பிக்கும் நாள் காலதாமதமானால் அழுகிப்போகும். விரைவாகப் புதுப்பித்தால் வீங்கிப்போகும் கேன்சரில் இரண்டு, வகையுண்டு, ஒன்று அழுகிப் போகும் இல்லை, வீங்கிப் போகும் அழுகிப்போனால் செல்கள் புதுப்பிப்பது காலதாமதமாகிறது என்று அர்த்தம் வீங்கிபோனால் செல்கள் புதுபிப்பது காலதாமதமாகிறது என்று அர்த்தம் வீங்கிபோனால் தேவையில்லாமல் செல்கள் உற்பத்தியாகின்றன என்று அர்த்தம் இப்படி நுரையீரல் தன்னைப் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் நுரையீரல் புற்று நோய் என்று பெயர் கண் தன் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் கண்ணில் கேன்சர் என்று பெயர் இப்படி உடலில் எந்த உறுப்பு தன்னைப் புதுபிக்கும் அறிவை மறந்து விருகிறதோ அல்லது கெட்டுவிடுகிறதோ அந்த உறுப்பில் கேன்சர் என்று கூறுகிறார்கள்.
நோய்க்கிருமியை கொலை செய்யும் அறிவு கெட்டுப்போனால் எய்ட்ஸ், உறுப்புகளை புதுபிக்கும் அறிவு கெட்டுப்போனால் கேன்சர். உயிர்க்கொல்லி நோய்களான கேன்சருக்கும் எய்ட்ஸ்சுக்கும் சரியான காரணம் இதுவரை எந்தப் புத்தகத்திலும் எந்த மருத்துவத்திலும் எந்த இண்டர்நெட்டிலும் கூறப்படவில்லை. ஆனால் நோயாளிகளைத் தனியாக அழைத்து சென்று உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு உயிர் கொல்லி நோய் கேன்சர் எய்ட்ஸ் வந்து விட்டது என டமால் என்று உடைப்பார்கள்.


நோயாளியான நீங்கள் கேன்சருக்கும் எய்ட்ஸ்சுக்கும் என்ன காரணம் என்று மருத்துவரைக் கேட்டால் இதுவரை இதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கவில்லை இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். குணப்படுத்த முடியுமா? என்று கேட்டால் குணப்படுத்த முடியாது இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். சரியான மாத்திரை இருக்கிறதா என்று கேட்டால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். பின்னர் நான் என்னதான் ஆவேன்? என்று கேட்டால் நீங்கள் கண்டிப்பாக இறந்து போய்விடுவீர்கள் என்று நமக்கு நாள் குறித்துத் தருவார்கள். ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள் கேன்சர் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு இதுவரை சரியான காரணமும் தெரியவில்லை, குணப்படுத்த சரியான மருந்து மாத்திரையும் கிடையாது, குணப்படுத்தவும் முடியாது, இறந்து தான் போவீர்கள் என்று கூறி உலக மருத்துவர்கள் சிகிச்சைக்கு மட்டும் தினமும் வாருங்கள் பல ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டு சிகிச்சை அளிக்கிறார்களே இது என்ன நியாயம் எனவே ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மருத்துவர் நமக்குத் தேவையா?


கேன்சர் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுபோகும் போது அதைக் குணப்படுத்தத் தெரியாமல் கண்ட்ரோல் செய்கிறோம் என்று மருந்து மாத்திரை சாப்பிடுவதே உயிர்க் கொல்லி நோய்க்கு முதல் படி. 



மீண்டும் இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறையும் போது அல்லது இல்லாமல் போகும் போது தவறான வைத்தியத்தைப் பயன்படுத்தினால் இரண்டாவது படி. இரத்தத்தின் அளவு குறையும் போது மீண்டும் தவறான வைத்தியத்தை பயன்படுத்தினால் மூன்றாவது படி. மனது கேட்டுபோகும் போது மனது சம்பந்தப்பட்ட நோய் வந்து விட்டது மருந்து மாத்திரை மூலமாகவே அல்லது தவறான சிகிச்சை மூலமாகவோ உங்கள் மனதை கண்ட்ரோல் செய்ய நினைத்தால் இது நான்காவது படி.

இந்த நான்கு படிகளைக்கடந்து உயிர்க் கொல்லி நோயான கேன்சர் என்ற ஐந்தாவது படிக்குத் தள்ளப்படுகிறோம் எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்க் கொல்லி நோய்களுக்கும் இப்போது உலகில் உள்ள தவறான மருத்துவமே காரணம். உலக மருத்துவம் தான் இந்தத் தவறான வைத்தியங்கள் செய்கிறோம் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கேன்சர் எய்ட்ஸ்சுக்கு புகைப்பிடிப்பது தான் காரணம் ஓசோனில் ஓட்டை விழுந்ததுதான் காரணம் என்று நமக்குத் தவறான விசயங்களைச் சொல்லிக்கொடுத்து திசை திருப்புகிறார்கள்எனவே தயவு செய்து எந்த நோயையும் கண்ட்ரோல் செய்யாதீர்கள் ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்தால் அதன் கடைசிவிளைவு கேன்சர் எய்ட்ஸ் ஆகத் தான் இருக்கும்.


கேன்சர், எய்ட்ஸ்சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களிடம் மருந்து இல்லை, உங்களுக்குத் தெரியாது உங்களால் குணப்படுத்த முடியாது என்பதற்காக உலகிலேயே மருந்து இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை என்பதற்காக உலகத்தில் மருந்து இல்லை என்று கூறலாமா? எனவே எந்த மருத்துவரும் கேன்சர் எய்ட்ஸ்சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது குணப்படுத்த முடியாது என்ற தயவு செய்து கூறவேண்டாம் எனக்குத் தெரியாது, என்னிடத்தில் மருந்து இல்லை, நான் இருக்கும் மருத்துவத்துறையில் இதற்கு மருந்து இல்லை என கூறி வேறு எங்காவது, வேறுயாரிடமாது, வேறு மருந்து முறையில் இதனைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்களைத் திருப்பி அனுப்பிடுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்கு மனித உயிர்கள் தான் கிடைத்தனவா? ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு நாம் ஏன் படிக்க வேண்டும்? நாம் மருத்துவர் என்று எப்படி தைரியமாக செல்ல முடியும் எனவே ஒரு மருத்துவராக நீங்கள் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொன்னால் வெட்கப்படுங்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்குப் பல வருடங்கள் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 


உங்கள் மனுக்கோ, மகளுக்கோ கேன்சர், எய்ட்ஸ் இருக்கிறது என்று உங்கள் மருத்துவர் கூறினால் உங்கள் மக்களிடம் போன் செய்து கூறுவீர்களா? முதலில் மருத்துவர் காலில் விழுவீர்கள் ” ஐயா தயவு செய்து என் மகனிடம் கூறிவிடாதீர்கள் அவனால் தாங்க முடியாது” என்று பெற்றோர் கண்களில் நீருடன் அழுவார்கள் நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு கேன்சர், எய்ட்ஸ் என்றால் நம்மால் அதை அவரிடம் கூற முடியுமா? மறைப்போம். ஆனால் மருத்துவர்கள் யாரோ ஒருவர்தானே ரோட்டில் செல்வோர்தானே என்று நோயாளிகளுக்குக்  கேன்சர் வந்துவிட்டது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் உடனே கூறிவிடுகிறார்கள் உலகில் கேன்சர் மற்றும் எய்ட்ஸ் என்ற நோய் மனிதனைக் கொள்வது கிடையாது. இந்த நோய்க்கு மருந்து இல்லை மாத்திரை இல்லை இறந்து தான் போவீர்கள் என்று மருத்துவர்கள் கூறும் அந்த வார்த்தைதான் மனிதர்களுடைய உயிரைக் குடிக்கிறது. எனவே உயிர்க்கொல்லி நோய்கள் யாருக்காவது வந்தால் தயவு செய்து அதை அவர்களிடம் கூறாதீர்கள் அவர்க்குத் தெரியாமல் இருந்தால் பல வருடம் உயிரோடு இருப்பார் குணப்படுத்த முடியாத நோய் என தவறாகப் புரிந்து கொண்டால் அவர் மனது பாதித்து, மனது உடலைப் பாதித்து வேகமாக நோய் பெரிதாகிறது.


ஒரு மருத்துவருக்கோ அலல்து அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கோ உயிர்க் கொல்லி நோய்கள் வந்தால் எங்கள் மருத்துவ முறைப்படி இதைக் குணப்படுத்த முடியாது என்று அவர் உயிரை போக்கிக் கொள்வாரா? அல்லது மற்ற மருத்துவத்தில் எங்காவது குணப்படுத்த முடியாதா என்று தேடி ஓடுவாரா?


எனவே தயவு செய்து எந்த மருத்துவராக இருந்தாலும் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று தயவு செய்து கூறாதீர்கள் என்னால் முடியாது வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுங்கள். உங்களால் முடியாது என்பதற்காக உலகத்தால் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்.


எனவே சர்க்கரை நோயைக்கூட குணப்படுத்தத் தெரியாத என்ற ஒரு மருத்துவராலும் கேன்சர் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. எனவே அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி நீங்கள் உங்கள் மனதை கெடுத்து உடலைக் கெடுத்து நோயை பெரிதாக்காதீர்கள். கேன்சர், எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். ஆனால் மருந்து மாத்திரை மூலம் கண்டிப்பாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் சுலபமாக நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். எனவே இந்த இணையதளத்தில் நான் எழுதிய கட்டுரைகளை முழுவதுமாக படிப்பதன் மூலமாக நீங்களே உங்கள் நோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்தி கொள்ளலாம்.


உயிர்க் கொல்லி நோய்கள் வந்தவர்கள் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால் மட்டுமே குணப்படுத்த முடியும். எனவே தயவு செய்து நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்கள் மனதிற்கு வலுசேர்க்கும், உடலுக்கு வலுசேர்க்கும். உடல் முழுவதையும் குணப்படுத்தும்.


Sunday 13 May 2018

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் !!

👉 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு சாப்பிடுங்கள்.
 
👉 நமது வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான செரிமான அமிலங்கள் உள்ளது. இந்த செரிமான அமிலங்கள் நாம் உண்ணும் உணவை செரிக்க வைப்பதற்கு உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். எச்சிலானது உணவை உடைப்பதற்கான என்சைம்களை சுரக்க உதவுகிறது. 
 
👉 ஆனால், நாம் உணவுடன் தண்ணீர் அருந்துவதால் இந்த செரிமான அமிலங்கள் நீர்த்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
 
👉 சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரை குடித்து வரலாம். அவ்வாறு சாப்பிடும் முன்பாக வெந்நீரைக் குடிப்பதால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
 
👉 சப்பாத்தி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது போன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 
 
👉 எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 
 
👉 சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பு மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிக்கலாம். ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.

Saturday 12 May 2018

மாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அனைவராலும் காய்கறி ஜூஸ்களைக் குடிக்க முடியாது. ஆனால் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் என்றால் கட்டாயம் அனைவருமே விரும்பி குடிப்போம். அந்த வகையில் பழச்சாறுகள் ருசியாக இருக்கும்.


அப்படி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழச்சாறு தான் மாதுளை ஜூஸ். மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக்குவதாக தெரிய வந்துள்ளது.
மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். அதுவும் மாதுளை ஜூஸை தயாரித்த உடனேயே குடித்தால் தான், இதன் முழு நன்மைகளையும் பெற முடியும். சரி, இப்போது மாதுளை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

மாதுளை ஜூஸில் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான, புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. முக்கியமாக இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

ஆரோக்கியமான இதயம்

மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.

சர்க்கரை நோயை எதிர்க்கும்

மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.

இரத்த சோகையை சரிசெய்யும்

மாதுளை ஜூஸில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது இரத்த சோகையை சரிசெய்ய உதவும். இந்த ஜூஸி இரும்புச்சத்தும் வளமான அளவில் நிறைந்துள்தால், இரத்த சோகை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் கே, இரத்தம் உறைவதைத் தடுக்கும் மற்றும் ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவும்.

ஆரோக்கியமான சருமம்

மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும். இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கம் தடுக்கப்படுவதோடு, புதிய செல்களைப் புதுப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் மற்றும் நோய்களும் தடுக்கப்படும். மேலும் இது பிம்பிள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.

ஆரோக்கியமான தலைமுடி

மாதுளை ஜூஸைக் குடித்தால், அது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு உதவும். இந்த ஜூஸை தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இது மயிர்கால்களை வலிமையாக்கி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் இந்த ஜூஸ் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வலிமையான பற்கள்

மாதுளை ஜூஸில் உள்ள தனித்துவமான பண்புகள், பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். எனவே உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், மாதுளை ஜூஸை தினமும் குடியுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அளவை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

செரிமானம் சிறப்பாக நடைபெறும்

மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். மாதுளை ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.

Wednesday 9 May 2018

நினைவாற்றலை அதிகரிக்கும் ப்ராக்கோலி....!

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.



அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு  வகிக்கிறது.
 
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம்  காணப்படுகிறது. 
இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும்.
 
ப்ரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, உடலில் உடலில் இரத்த ஓட்டத்தில் தடையின்றிச் சுற்றிவரும் தேவையற்ற பொருள்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் போக்க  உதவுகிறது.