Friday 20 July 2012

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!




தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். அதிலும் பிரௌன் பிரட்டானது கம்பு அல்லது கோதுமையால் ஆனது. மேலும் அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே இது ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இந்த பிரௌன் பிரட்டை வாங்கும் போது நன்கு தரமானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் சில பிரௌன் பிரட்கள் செயற்கை வண்ணங்களாலும் பிரௌனாக நிறமூட்டப்பட்டிருக்கும். சரி, இப்போது அந்த பிரௌன் பிரட்டை சாப்பிட்டால் அப்படி என்ன உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்ப்போமா!!!

முழு தானியங்கள் : பிரௌன் பிரட்டை செய்யப் பயன்படுத்தப்படும் தானியங்கள் சுத்தகரிக்கப்படாதது என்பதால் அது பிரௌன் நிறத்தில் உள்ளது. மேலும் அதில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அதை செய்யப் பயன்படுத்தப்படும் தானியத்தில் இருக்கும் எந்த ஒரு பகுதியையும் நீக்காமல் தயாரிப்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். மேலும் அதில் வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை உண்டால் செரிமானமும் எளிதாக நடைபெறும். மேலும் இது டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். அதனால் உடலானது ஸ்லிம் ஆவதோடு, உடலுக்கு தேவையான அளவு மட்டும் கொழுப்புகளும் கிடைக்கும். ஆகவே ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க, இதனை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள் : சாதாரண பிரட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களை நிரப்புகின்றனர். ஆனால் அப்போது நார்ச்சத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால் இந்த பிரௌன் பிரட்டில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே போதிய அளவு பிரேளன் பிரட் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பதோடு, வயிற்றுக்கும் போதிய உணவு கிடைத்த நிம்மதியும் இருக்கும். மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் பராமரித்து வரும். அதுமட்டுமல்லாமல் இதனை உண்பதால் மாரடைப்பு ஏற்படுவதும் குறையும் என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலம் இந்த பிரௌன் பிரட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளும்.

பிரௌன் பிரட்டானது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் அதனை உண்ணும் போது அளவுக்க அதிகமாகவும் உண்ணக் கூடாது. ஏனென்றால் அதில் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே குறைந்த அளவு உண்டால் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கலாம். பிரௌன் பிரட் வெள்ளை பிரட்டை விட சுவையானது அல்ல தான், ஆனால் ஆரோக்கியமானது.

Sunday 1 July 2012

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?



என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது.
சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

சோம்பல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்!



மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று, புற்றுநோய். புற்றுநோய்க்கு முற்றும் தடை போட இன்னும் வழிபிறக்கவில்லை என்றபோதும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்று, உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை.
`புகையிலை, மது, புகை' போன்ற பழக்கங்களுக்கும் புற்றுநோயில் முக்கியப் பங்குண்டு என்பது நாம் அறிந்ததே. புற்று நோய் குறித்த `பகீர்' விவரங்கள் இங்கே.
 
செல்வ வளமை, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும். மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் இங்கும் கேன்சர் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டில் உலகளவில் சுமார் ஒன்றே கால் கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு வாக்கில் அப்படியே இரண்டு மடங்காகிவிடும் என்கிறார்கள்.
பதப்படுத்திய அல்லது துரித உணவால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடல் பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம். 2030-ல் இந்தியா, சீனாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்திருக்கும். புகைப்பதைக் குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந து நல்ல பலனைக் கொடுக்கும். முன்பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையைத் தொடங்குவது நல்லது. குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது, தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்று நோய் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிற போதிலும், புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது.
இந்தப் புற்று நோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் காணப்படும் புற்று நோய்களில் 40 சதவீதம், வசதியான வாழ்க்கை முறையை உடைய மேலைநாடுகளில்தான் காணப்படுகிறது.
உண்மையில் இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் 15 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நன்றாக வளர்ந்த நாடுகளில் மார்பகப் புற்று நோய், நுரையீரல், பெருங்குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
வளர்ச்சி அடையாத நாடுகளில் கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் காணப்டுகின்றன. மேற்கண்ட ஏழு வகை புற்று நோய்கள்தான் மொத்த புற்றுநோய்களில் 62 சதவீதமாக உள்ளன.

Wednesday 9 May 2012

கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்!



அழகுக்காக கூந்தலுக்கு எத்தனையோ வர்ணம் பூசினாலும் கார் கூந்தல்தான் பெண்களுக்கு அழகு என்கின்றனர் நிபுணர்கள். கூந்தலை கருமையாக்க இயற்கையே செம்பருத்தியை அளித்துள்ளது. செப்பருத்தி இலையும், பூக்களும், கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

செம்பருத்தி தைலம்

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

கூந்தல் உதிர்வை தடுக்கும்

கூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள் செம்பருத்தி தைலத்தை பூசலாம். இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.

பொடுகு தொல்லை நீங்கும்

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

Monday 9 April 2012

மறந்துபோன எலுமிச்சை சோடா



நாமமறந்துவிட்எலுமிச்சை +உப்பு +சோடஇதஒரஇயற்கையாவெயிலகாகுளிரபானமஆகும். ஆனாலநம்மிலபலரஇதமறந்தவிட்டஉடலுக்கதீங்கஇளைக்ககூடிகூல்ட்ரிங்க்ஸ் ( அதாவதவெளிநாட்டகுளிரபானங்கள் ) சாப்பிடுகின்றனர்.

அதுவுமமற்றவர்களநம்மபார்க்வேண்டுமஎன்பகட்டுக்காதான். இதனாலஎந்பயனுமஇல்லை. ஆனாலதீங்கஉள்ளது. சிலரசாப்பிட்டமுடித்தவுடனசெரிப்பதற்காதேவையற்குளிரபானமஅருந்துவர்.

ஆனாலநாமமறந்தபோஎலுமிச்சசோடாவினபயன்களதெரிந்தாலஇதெயெல்லாமஅறவவெறுத்தவிடுவோம். எலுமிச்சமபழத்தினதாயகமநமதஇந்தியதானஎன்பதநமக்கமகிழ்ச்சியுமபெருமையுமஅளிக்ககூடியது. சரி இப்போதநாமஎலுமிச்சசோடாவினபயன்களஎன்னவென்றபார்ப்போம்.

எலுமிச்சமபழம

உடலவெப்பத்தைககுறைக்கும். புளிப்பஅகற்றும். உடலைததூய்மைப்படுத்தும். உடலஉறுப்புகளஇயல்பாஇயங்குவதற்குததூண்டுதலஅளிக்கும். மூளையினவளர்ச்சியையுமஇயக்கத்தையுமமேம்படுத்தும். வாய்க்கசப்பஅகற்றும். கபத்தைககட்டுப்படுத்தும்.

வாதத்தவிலக்கும். இருமல், தொண்டநோய்களைககுணப்படுத்தும். காநோய்க்கநல்கூட்டமருந்தாஉதவும். மூலத்தைககரைக்கும். விஷங்களமுறிக்கும். பொதுவாஉடலநலமதொடர்பாஇதஆற்றுமஉதவிக்கஈடாவேறஎந்தககனியையுமகூமுடியாது.

நரம்பதளர்ச்சிக்க

இதமட்டுமின்றி நரம்புகளுக்குபபுத்துணர்ச்சியையுமதெம்பையுமஅளிக்கிறது. எலுமிச்சமபழத்திலஉள்மற்றொரரசாயனபபொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தினஅமிலததன்மையைககட்டுப்படுத்துவதுடனநரம்புததளர்ச்சியடையாமலகாக்கிறது.

குழந்தைகளுக்க

மற்எந்தபபழத்தையுமவிஎலுமிச்சமபழமதானகுழந்தைகளுக்கஏற்படக்கூடிபிணிகளுக்குசசரியாமருந்தாஉதவுகிறது.

உணவுடனசேர்த்த

எலுமிச்சமபழத்தஅன்றாஉணவோடஏதாவதஒரவகையிலபயன்படுத்தி வந்தாலஜீரசக்தி அதிகமாகும். நல்பசியுமஎடுக்கும். பித்தமகுறையும்.மண்ணீரலவீக்கத்துக்கநல்லது, வயிற்றுப்போக்கபோன்றவற்றிற்குமஇதமருந்தாஉதவுகிறது. எலுமிச்சஊறுகாயஉணவஜீரணிக்உதவும்.

முஅழகிற்கு

எலுமிச்சையைககொண்டமுகத்தசுத்தமசெய்ய(facial) முகப்பருக்கள்,என்னபசை,கரும்புள்ளி நீங்கி முகமஅழகபெரும்.

வெயிலகாலத்திற்க

எலுமிச்சமரசத்தைககோடநாட்களிலஅருந்தினாலஉடலஇயற்கையாகவகுளிர்ச்சி பெறும். சூரிவெப்பத்தினாலஏற்படுமஆயாசமகுறைந்தசுறுசுறுப்பாகசசெயற்பமுடியும்.

சர்க்கரநோயாலபாதிக்கப்பட்டவர்களுக்க

சர்க்கரநோயாலபாதிக்கப்பட்டவர்களசர்க்கரைக்கபதிலாஉப்பசேர்த்தபருகலாம்.

கல்லீரலபலப்பட

எலுமிச்சமபழத்தசாறெடுத்து, அதிலதேனகலந்தபருகி வந்தாலகல்லீரலபலப்படும்.

தலைவலி நீங்க

தேநீரிலஒரஅரைஎலுமிச்சமபழத்தபிழிந்தசாறகலந்தஅருந்தி வந்தாலதலைவலி குணமாகும்.

நீர்ககடுப்பநீங்

வெயிலகாலமஎன்பதாலநீர்க்கடுப்பபிரச்சினசிலருக்கஅவதியஏற்படுத்தும். இந்நிலநீங்எலுமிச்சமபழச்சாறுடனசிறிதஉப்பகலந்தஒருவாரமஅருந்தி வந்தாலநீர்க்கடுப்பு, நீரஎரிச்சலநீங்கும்.

* எலுமிச்சமபழம், உடலிலகளைப்பைபபோக்கி உடலுக்கபுத்துணர்வஉண்டாக்கும்.
* எலுமிச்சமபழச்சாற்றமுகத்திலதேய்த்தகுளித்தாலவறட்சி நீங்கும்.
* தாதுவைககெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கினபோதஉண்டாகுமவலியைககுறைக்கும்.
* மூலத்திற்கசிறந்மருந்தாகும

முக்கிகுறிப்ப

எலுமிச்சமபழச்சாற்றஎப்போதுமவெறுமவயிற்றிலஅருந்தக்கூடாது. அப்படிசசெய்தாலஇரைப்பபெருமளவபாதிக்கப்பட்டஇரைப்பபுணபோன்குறைபாடுகளஏற்பட்டஅவதியுநேரிடும்.

- டாக்டர். ஆர்.பாரதகுமார், BHMS.,MD. , மதுரை.

Sunday 8 April 2012

சர்க்கரை (சீனி) நம்முடைய உடலுக்கு தேவையில்லை..!



மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.

காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்




ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.

மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

 1. ஒரு நாளைக்கு 4 கப் காஃபி


காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 2. மூளைக்கு வேலை


எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.

 3. மன உளைச்சல் வேண்டாம் (No Tension)


மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

 4. நிம்மதியான உறக்கம்


கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!

 5. சுறுசுறுப்பான செயல்பாடு


நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

 6. உடல் நலனில் அக்கறை


வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

 7. மீன் சாப்பிடுங்க

மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.

 8. மாத்திரைகளை தவிருங்கள்


வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி: கல்வி களஞ்சியம்.

Saturday 7 April 2012

வேர்களை வலுவாக்குங்க... கூந்தல் உதிராது!



கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

எண்ணெய் மசாஜ்

ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

நீராவி ஒத்தடம்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீய்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.

கறிவேப்பிலை தைலம்

நூறு மி.லி. தேங்காய் எண்ணெயில் கைப்பிடியளவு கறி வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக்கொண்டு, அந்த எண்ணெயைத் தினம் தலைக்குத் தடவவேண்டும். கூந்தலை நன்றாக விரித்துப்போட்டு வேர்களில் படுமாறு அந்த எண்ணெயை தடவினால் அது கூந்தலை பலப்படுத்தும்.

கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை கூந்தலில் பூசி ஊறவைத்து தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.

தேங்காய்ப்பால் மசாஜ்

ஐந்து டேபிள் ஸ்பூன் திக்கான தேங்காய் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கூந்தலின் வேர்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, சிறிது நேரம் அப்படியே விட்டு அலசலாம்.

இளநீர் அதிகம் கிடைக்கிற பட்சத்தில் அதனால் கூந்தலை அலசுவது கூந்தலுக்கு ரொம்பவும் ஆரோக்கியமானது. பத்து கிராம் ஜெலட்டினை ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில் கரைத்துக் குடிப்பது கூந்தலை மட்டுமின்றி, நகங்களையும் ஆரோக்கியமாக வைக்கும்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தயிருடன் கலந்து, தலைக்குத் தடவி, சிறிது நேரம் ஊறியவுடன் குளிக்கலாம். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இதைத் தவிர்க்கவும்.

வைட்டமின் பி உணவுகள்

வைட்டமின் பி 5 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் கூந்தலை பலமாக்கலாம். அதேபோல் வைட்டமின் இ அதிகம் உள்ள பட்டர்ப்ரூட், முந்திரி, பாதம் கொட்டைகள், ஆலிவ் ஆயில் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிராது பொடுகுத்தொல்லை ஏற்படாது. கற்றாழை கூந்தலின் வேர்க்கால்களை வலுவாக்கும். உதிர்ந்த கூந்தலுக்கு பதிலாக புதிய கூந்தலை வளரச்செய்யும்.

Friday 6 April 2012

நரை முடி அகல முருங்கைக் கீரை (Moringa oleifera)



சாதாரணமாவீடுகளிலதென்படுமமுருங்கமரத்தை, மருத்துபொக்கிஷமஎன்றசொல்வேண்டும். ஏனெனிலஇதஎண்ணற்வியாதிகளுக்கவகைகளிலமருந்தாகிறது. முருங்கைககீரவாரமஇருமுறசாப்பிட்டுவஉடலசூடதணியும்.

வெப்பத்தினகாரணமாமுடி உதிர்வதநிற்கும்.முடி நீண்டுவளரும். நரமுடி அகலும்.தோலவியாதிகளநீங்கும். முருங்கைகீரையிலஇரும்புசசத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாஉள்ளது. அந்வகையிலமுருங்கைககீரையினபயன்களைபபார்ப்போம்.

முருங்கமரமமுழுவதுமமனிதனுக்கபயனளிக்கிறது. முருங்கைபமருத்துகுணமகொண்டது. முருங்ககீரையவேகவைத்தஅதனசாற்றகுடித்தவந்தாலஉடலசூடதணியும். வெப்பத்தினகாரணமாஉடலிலஏற்படுமமலசிக்கல்நீங்கும்.

முருங்ககாயசத்துள்காய். உடலுக்கநல்வலிமையைககொடுக்வல்லது.ஆதலாலஇதஉண்டாலசிறுநீராகமபலப்படுமதாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்தகட்டி' என்பெயருமஇருக்கிறது. கோழையஅகற்றும்.

முருங்கஇலையஉருவி காம்புகளநறுக்கி விட்டபினமிளகரசமவைத்தசாப்பாட்டுடனசேர்த்தஉண்டவந்தாலை, காலஉடம்பினவலிகளயாவுமநீங்கும். முருங்கஇலைகளிலஇரும்பு, தாமிரம், சுண்ணாம்புசசத்தஆகியவஇருக்கின்றன.

இந்இலைகளநெய்யிலவதக்கி சாப்பிட்டாலரத்சோகஉள்ளவர்களினஉடம்பிலநல்ரத்தமஊறும். பலகெட்டிபபடும். முடி நீண்டுவளரும். நரமுடி குறையும்.தோலவியாதிகளநீங்கும். கடுமையாரத்சீதபேதி, வயிற்றுபபுண், தலைவலி, வாய்ப்புணஆகிவியாதிகளுக்கெல்லாமமுருங்கைககாயகண்மருந்து.

முருங்கைககாயசாம்பாரஎல்லோருக்குமபிடித்தமானதே. இந்சாம்பாரசுவையானதாமட்டுமஇருந்தவிடாமலமலச்சிக்கல், வயிற்றுபபுண், கணநோயஆகியவற்றுக்கமருந்தாகவுமபயன்படுகிறது.

வாரத்திலஒருமுறையஇரண்டமுறையமுருங்ககாயஉணவாஉபயோகித்தால், ரத்தமுமசிறுநீருமசுத்தி அடைகின்றன. வாய்ப்புணவராதபடி பாதுகாப்பஉண்டாகிறது. முருங்கைக்காயசூபகாய்ச்சல், மூட்டவலியையுமபோக்வல்லது.

கர்ப்பப்பையினகுறைகளபோக்கி கருத்தரிபதஊக்குவிக்கும். பிரசவத்ததுரிதப்படுத்தும். இதனஇலையகொண்டதயாரிக்கப்படுமபதார்த்தம், தாய்ப்பாலசுரப்பதஅதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பசளி, போன்சுவாசககோளாறுகளுக்கமுருங்ககீரசூபநல்லது. ஆண், பெணஇருபாலரினமலட்டுததன்மையஅகற்றும். முருங்கஇலஇரத்விருத்திக்கநல்உணவு.

இருமலை‌ப் போ‌க்கு‌ம் தூதுவளை (Solanum trilobatum)



ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம்.

இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

Thursday 5 April 2012

இதயத்தை பலமாக்கும் எலுமிச்சை!



காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது. எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Sunday 1 April 2012

ஜங்க் ஃபுட் பதார்த்தங்களைத் தவிருங்கள்: மறுபடியும் ஒரு எச்சரிக்கை



இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பும் கொழுப்பும் இனிப்பும் அளவுக்கதிகமாக இருப்பதாகவும், இவற்றை அதிகம் உண்டால் இந்திய இளைஞர்களுக்கு பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

ஜங்க் ஃபுட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு தீங்கான உணவு வகைகளில், டிரான்ஸ்ஃபேட் என்று சொல்லப்படுகின்ற எளிதில் கெட்டக் கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிகிறது.
இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம் என்றும் இந்தியாவில் இவ்வகையான உணவு வகைகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தியுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பெருமளவில் வர்த்தகமாகும் முன்னணி உணவுப் பதார்த்தங்களில் காணப்படும் போஷாக்கு உள்ளடக்கங்களை அளந்து பார்த்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் CSE என்று சொல்லப்படும் செண்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்வயர்மெண்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேகீ நூடுல்ஸ், டாப் ராமென் நூடுல்ஸ், மெக்டொனால்ட்ஸ் பர்கர், கெண்டகி ஃபிரைட் சிக்கன் பொரித்த கொழி, ஹல்திராம் நிறுவனத்தின் ஆலு பூஜியா காரசேவு வகை, பெப்ஸி கோ நிறுவனத்தின் இடைத்தீனி பதார்த்தங்கள் போன்றவற்றின் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போஷாக்கு தகவல்களையும், அப்பொருட்களை பரிசோதனைக்கூடங்களில் ஆராய்ந்து பார்த்தபோது அதில் தெரியவந்த போஷாக்கு தகவல்களையும் இந்த அமைப்பினர் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அதிக கொழும்பும் அதிக உப்பும் அதிக இனிப்பும் கொண்ட உணவு வகைகளை உண்டால் உடல் நலத்துக்குத் தீங்கு என்ற பொதுவான தகவல் மக்களுக்குத் தெரிந்துள்ளது.

ஆனால் தாங்கள் பெரும்பான்மையாக உண்ணும் இம்மாதிரியான உணவுகளில் மோசமான வஸ்து எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதைப் பற்றியோ, அவற்றை உண்ணுவதால் தம்முடைய உடல் நலத்துக்கு எப்படியான பாதிப்பு நேர்கிறது என்பதை பற்றியோ மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்று CSE அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண் தெரிவித்துள்ளார்.

எப்படி பாதிப்பு நேர்கிறது?

ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் அவர் ஒரு நாளில் அதிகபட்சமாக எவ்வளவு கொழுப்பையும், உப்பையும், இனிப்பையும் உண்ணலாம் என்பதற்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜங்க் ஃபுட்டாக அமைந்துள்ள உணவுப் பதார்த்தங்களைக் கொஞ்சம் சாப்பிட்டாலே அதில் ஒருவர் ஒருநாளில் அதிகபட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டிய போஷாக்கில் பெரும்பான்மையானவை உடலில் சேர்ந்துவிடுகின்றன.

இவ்வாறாக உடலில் அளவுக்கதிகமாக சேரும் கொழும்பும், உப்பும், இனிப்பும் உடலில் படிந்து ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதாக அறிவியல் நமக்கு எடுத்துரைக்கிறது.

உணவுப் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியா?

உதாரணத்துக்கு ஆரோக்கியமாக வாழ ஒருவருக்கு ஒரு நாளில் ஆறு கிராம் உப்பு போதுமானது. ஆனால் மேகீ நூடுல்ஸ் ஒரு பாக்கெட் சாப்பிட்டாலே அதில் மூன்றரை கிராம் உப்பு இருக்கிறது. அதாவது நாம் ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பில் அறுபது சதவீதம் இந்த ஒரு பாக்கெட் நூடுல்ஸிலேயே இருக்கிறது. அதே நாளில் நாம் மற்ற மற்றப் பொருட்களையும் சாப்பிடும்போது உடலில் உப்பு கூடிப்போய் விடுகிறது. உப்புச் சத்து அதிகமானால் உடலில் இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிற ஆரம்பித்துவிடும்.

வர்த்தகப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள போஷாக்குத் தகவல்கள் போதுமான அளவில் இல்லை என்றும், சில வேளைகளில் உண்மைக்கு முரணாக இருப்பதாகவும் CSE தெரிவிக்கிறது.

ஹல்திராம்ஆலு பூஜியா காரசேவுப் பொட்டலத்தில் டிரான்ஸ்ஃபேட் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தபோது நூறு கிராம் காரசேவில் இரண்டரை கிராம் கெட்ட கொழுப்பு இருக்கத்தான் செய்தது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மெக்டொனால்ட்ஸ் கடையில் குழந்தைகளுக்கான சிறிய சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கி ஒரு பிள்ளை உண்ணும்போது, ஒரு நாளில் அக்குழந்தைக்கு தேவைப்படும் உப்பில் தொண்ணூறு சதவீதம் அதிலேயே கிடைத்துவிடுகின்றது என்ற தகவலை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் எச்சரிப்பதில்லை இல்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் போன்ற விஷயங்கள் இந்தியாவில் மிக அதிகமாக இருந்துவரும் ஒரு சூழலில், இப்படியான உணவு வகைகளை இந்தியக் குழந்தைகள் அதிகம் சாப்பிட ஆரம்பித்தால், இளம் வயதிலேயே இவர்கள் நோய்வாய்ப்படும் ஆபத்து ஏற்படுகிறது என CSE அமைப்பு எச்சரித்துள்ளது.

சுத்தமான தேனின் மருத்துவ குணங்கள்



சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.

திரையைத் தொடும் அவசியமில்லை விரல் அசைவில் இயங்கும் சோனியின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி - வீடியோ

 


டச் ஸ்கீரின் தொலைபேசிகளில் அதன் திரையை விரல்களில் தொட்டு நகர்த்தியே பயன்படுத்த முடியும் இனி அதற்கு
அவசியமில்லை என சோனி நிறுவனத்தின் Sony Xperia sola எனும் ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது சோனி நிறுவனம்.





பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!



கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பளபளப்பான தோற்றம்

கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.

வாந்தி, மயக்கம்

கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.

இனிப்பு உணவுகள்

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இதயத்துடிப்பு அதிகம்

கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!



உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இவை குறைவாக இருந்தால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். இதனால் உடல் சோர்வடையும், முகம் வெளிறிப்போய்விடும்.

ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாக உள்ளது. ஊட்டச்சத்துள்ள, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாத காரணத்தினாலே பெரும்பாலோனோர் ரத்த சோகை நோய்க்கு பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் பாதிப்பு

ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை யினாலும் ரத்த சோகை உண்டாகும். ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும்.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.

கீரைகள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பழங்கள், தானியங்கள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பீட்ரூட்

பீட்ரூட் காய்கறியில் உயர்தரை இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதோடு வைட்டமின் சி சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக்கொள்ளப்படும்.

மாமிசம், சிப்பி உணவு

இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.