Sunday 18 March 2018

மனச்சோர்வு( Depression ) - டாக்டர் ஜி. ஜான்சன்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த ” டிப்ரஷன் “.என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது.



” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் அந்த கவலையை மறந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறோம்.அன்புக்குரியவர்களை பிரிய நேர்ந்தால் அல்லது அவர்களை மரணம் காரணமாக நிரந்தரமாக இழக்க நேர்ந்தாலும்கூட கொஞ்ச நாட்கள் கவலைப்பட்டு பின்பு காலப்போக்கில் அதிலிருந்து விடுபடுகிறோம்.இத்தகைய தற்காலிக கவலைப் படுவதை மனநோய் என்று சொல்லமுடியாது.

அறிகுறிகள்

மனச்சோர்வு என்பது ஜனத்தொகையில் 15 சதவிகிதத்தினருக்கு உண்டாகிறது. இதை சில அறிகுறிகளை வைத்து நிர்ணயம் செய்யலாம். பின்வரும் அறிகுறிகளில் ஐந்துக்கு மேல் இரண்டு வாரங்களுக்குமேல் காணப்பட்டால் அதை மனச்சோர்வு எனலாம்.

* மனச்சோர்வு அல்லது மன அழுத்தம்.
* எதிலும் ஆர்வமின்மை அல்லது கேளிக்கைகளில் பங்கு பெறாத நிலை.
* பசியின்மை அல்லது எடை குறைதல்.
* தூக்கமின்மை அல்லது அதிகம் தூங்குதல்.
* களைப்பு அல்லது சக்தியின்மை.
* அமைதியின்மை அல்லது சோம்பல்
* குற்ற உணர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
* முடிவெடுப்பதில் தடுமாற்றம்.
* அடிக்கடி சாவு பற்றியும் தற்கொலை பற்றியும் எண்ணம்.

இவை தவிர மனச்சோர்வு உள்ளவர்கள் பாலியல் உறவில் நாட்டம் இல்லாதவர்களாகவும், அதிகம் நண்பர்களிடம் பழகாதவர்களாகவும், மதுவை நாடுபவர்களாகவும் இருக்கலாம்.
முழுமையான மனச்சோர்வால் பாதிப்புக்கு உள்ளான சிலருக்கு மனநோய்களில் உண்டாகும் டெலூசன், ஹாலுசினேசன் என்று கூறப்படும் மருட்சி , மாயத் தோற்றங்கள் உண்டாகலாம். குறிப்பாக வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில அதிர்ச்சியான சம்பவங்கள் மனச்சோர்வை உண்டுபண்ணினாலும், ஒருவரின் மரபணு காரணமாகவும் அதற்கு அளவுக்கு அதிகமான மனச்சோர்வை உண்டுபண்ணலாம். மனச்சோர்வு இதனால் பரம்பரை காரணமாகவும் உண்டாகலாம்.

பெரும்பாலும் மனச்சோர்வு நடுத்தர வயதில் ஏற்படும். சிலருக்கு இது சில மாதங்களிலிருந்து ஒரு வருடத்தில் தானாக குறைந்துவிடும். ஆனால் வேறு சிலருக்கோ மனச்சோர்வு தொடர்ந்து திரும்பத் திரும்ப ஏற்படலாம். முழுமையான சிகிச்சைப் பெறாமல் பாதியில் நிறுத்துபவர்களுக்கும் இதே நிலைதான்.

மனச்சோர்வும் தற்கொலையும்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் 4 முதல் 5 சதவிகிதத்தினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு வருடத்தில் மருத்துவரைப் பார்த்திருப்பார்கள். இதனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும் மருத்துவர்கள் அவர்களிடம் பேசி அவர்களிடம் தற்கொலை பற்றிய எண்ணம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வார்கள்.

மனச்சோர்வும் வேறு நோய்களும்

பல்வேறு நீண்ட நாட்கள் கொண்ட நோய்களாலும், தீராத நோய்களாலும், வலியை உண்டுபண்ணக்கூடிய நோய்களாலும்கூட மனச்சோர்வு உண்டாகலாம்.அவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளும் மனச்சோர்வை அதிகமாகலாம்.

* இரத்தக் கொதிப்பு மாத்திரைகள், கொழுப்பு குறைக்கும் மாத்திரைகள், இருதய நோய் தொடர்புடைய மாத்திரைகள் மனச்சோர்வை உண்டுபண்ணலாம்.

* ஸ்டீராய்ட் மாத்திரைகள், எண்டிபையாட்டிக் மாத்திரைகள், வலிப்பு மாத்திரைகள், வலி குறைக்கும் மாத்திரைகளும் மனச்சோர்வை உண்டுபண்ணலாம்.

* 20 முதல் 30 சதவிகித இருதய நோயாளிகள் மனச்சோர்வை எதிர்நோக்கலாம்.

* புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவிகிதத்தினருக்கு மனச்சோர்வு உண்டாகலாம்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பின் அளவுக்கு ஏற்ப மனச்சோர்வு உண்டாகும்.

* தைராய்டு சுரப்பி கோளாறிலும் மனச்சோர்வு உண்டாகும்.

சிகிச்சை முறைகள்

தற்கொலை எண்ணங்கள் கொண்ட நோயாளிகள் மனோவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்.அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெறுவதே நல்லது.

மனச்சோர்வைக் குணமாக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உட்கொள்ளலாம்.அதில் குணம் காணாவிடில் மனோவியல் மருத்துவரை நடுவதே நல்லது.

மனச்சோர்வு உள்ளவர்கள் மனோவியல் மருத்துவரைப் பார்ப்பதில் அச்சப் படவேண்டாம். தங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதாக மற்றவர் நினைப்பார்கள் என்று காலத்தை வீணாக்கவேண்டாம். இது மனம் தொடர்புடைய ஒரு நோய் என்பதை ஏற்று இதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொள்வதே நல்லது.

கண்ணாடி போட வேண்டிய அவசியம் இல்லை - பயன் பெறுக:

தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடியை அணிகின்றனர். கண்ணாடி அணிவது பார்க்க ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் என்று தெரியும்.



மேலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைக்காமல், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்க ஒரு பானம் உள்ளது. இப்போது அந்த பானம் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

குங்குமப்பூ (Saffron ) - 1 கிராம்
தண்ணீர் - 1 கப்

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார்!

குடிக்கும் முறை:

குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இதர நன்மைகள்:

குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். முக்கியமாக குங்குமப்பூ டீ ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும்.

தாடி வளர்க்க ஆசையா - இதோ டிப்ஸ்

ஆண்களுக்கு தாடி வைத்திருப்பது பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும். பல ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.



உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது. அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

உணவு:
புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது. அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.

வளர விடுங்கள்:
முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும். இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.

இறந்த தோலை நீக்குதல்:

உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள். இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும். ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள்.

கண்டிஷனர்:

நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும். இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும். காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது. கண்டிஷனர் உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.

வைட்டமின்கள்:

வைட்டமின் 'பி' யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும். பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும். பையோடின் - கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?


 
 பல மக்களிடம் கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கும். இது சிலருடைய குணமாக இருக்கலாம் அல்லது ஒரு சிலரோ மற்றவர்களை பார்த்து பழகிக்கொள்வார்கள். கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? என்று நம்மை வீட்டில் அடிக்கடி திட்டுவார்கள். அது நம்முடைய நலனுக்காகவே கூறுவர். 
 
இரத்த அழுத்தம் :
 
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, இரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
 
அது மட்டுமல்லாமல் எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் நரம்புப் பிரச்சனை வரவும் வழிவகுக்கிறது.
 
பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது :
 
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதை பெண் அடிமைத்தனம் என இன்றைய நாகரீக பெண்கள் சொல்கின்றனர். ஆனால் அது தவறு. 
 
கால் மேல் கால் போட்டு அமர்வதை திமிர், அகங்காரம், ஒழுங்கீனம் என்று சொல்லுவார்கள் அதற்கு காரணம் நம்மில் பல பெண்களுக்கு தெரியாது.
 
இரத்த ஓட்டம் :
 
பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.
 
கர்ப்பப்பை பாதிக்கும் :
 
கால் மேல் கால் போட்டு உட்காருவதால் கால் பகுதியில் இரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
நம் முன்னோர்கள் சொன்ன எதையும் நாம் உதாசினப்படுத்தி விடக்கூடாது. அதிலும் சில நன்மைகள் இருக்கும் என்று நம்ப வேண்டும்.

Friday 16 March 2018

ஏலக்காய் டீ செய்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா...!

சமையலில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு பொருளுக்கு சுவையையும், மணத்தையும் தரக் கூடியது. இது உணவு பொருள்களில்  மட்டுமில்லாமல் தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன.



மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ  தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
 
ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
 
உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
 
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி  வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
 
வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Sunday 4 March 2018

இர‌த்த உ‌ற்ப‌த்‌திக்கு இதை செய்து பாருங்க

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.



 முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து, உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
 
தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.

 இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்
 
பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

Saturday 3 March 2018

இனிப்பான சர்க்கரையின் கசப்பான உண்மை

நாம் தினமும் உண்ணும் சர்க்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.




நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சர்க்கரையைப் பயன்படுத்துகிறோம்.

இந்த வெள்ளை சர்க்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.

கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.

இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.

மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சர்க்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான். இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சர்க்கரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.

அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...!



சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். 




நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.  நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
 
தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
 
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை  பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.
 
எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன்  கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
 
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

இயற்கையில் கிடைக்கும் முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்

பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.




கர்ப்பப்பையின் குறைகளைப் போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து, பிரசவத்தைத் துரிதப்படுத்த உதவுகிறது. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
 
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டால்  சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
 
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். முருங்கை இலைகளை  நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
 
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரையைச் சூப் செய்து குடித்து வருவது நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.