Tuesday 25 April 2017

வேண்டாமே பரோட்டா

மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான்.



வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து உண்ணத்தொடங்கினர். மாறியத் உலகம் உணவு உட்கொள்ளும் முறைகளும் மாறின. சுவைக்கு அடிமையான மனிதன் ஆரோக்கியம் பற்றி அறவே மறந்தான் என்பதே உண்மை. நா ருசிக்கு முதலிடம் அளித்த மனிதன் எவற்றையெல்லாம் உண்கிறான் என்று அறிந்துகொண்டால் வியப்பைவிட வேதனையே மிஞ்சும்.

மைதா என்ற மாவு இக்கால மனங்கவர் உணவு. அது எதிலிருந்து கிடைக்கிறது? தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு. கோதுமைத் தானியத்தை அரைத்துச் சலித்தால் வீணாகும் மாவு. இவைதான் மைதா. அதாவது மைய்ய அரைத்தமாவு மைதா.


முதலில் இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது, தெரியுமா? சுவரொட்டிகள் ஒட்டத்தான் முதலில் இது பயன்படுத்தப்பட்டது. இந்த மாவைத் தண்ணீருடன் கஞ்சியாகக் காய்ச்சினால் நல்ல பசை கிடைக்கும். இதனை சுவரொட்டிகள் பயன்படுத்தினர்.

பின் இந்த மாவை கேக், பிரெட், ரொட்டி பரோட்டா , நூடுல்ஸ் ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தினர். இவற்றில் ரொட்டி பரோட்டா நம்மை அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் எண்ணிப்பாருங்கள் இது மைதாப் பசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை உண்டால் இது செரிமானமாக பல நாள்களாகும். மேலும் குடலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையது .மேலும் மைதாவை உண்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. இதில் எள்ளளவும் நார் சத்து இல்லாததால் மலச்சிக்கலும் உண்டாகும். பிரெட் உண்பவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படுவது உண்டு.
நூல்டுல்ஸ் அதிகமாக சிறுவர்களால் விரும்பப்படும் ஓர் உணவு. இதுவும் மைதாவினால் தயாரிக்கப்படுவதே. இதுவும் மாவுச்சத்து மட்டும் கொண்டது.
மைதாவின் நிறம் வெள்ளை வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் அது வெளுக்க ஒரு வேதியல் பொருள் சேர்க்கப்படுவதுதான். துணி வெளுக்க குளோரின் ஊற்றுவது போல் மைதா மாவு வெளுக்க இராசயனப் பொருள் (பென்சோயில் பெராக்சைடு)  சேர்க்கப்படுகிறது. அது நம் வயிற்றையும் வெளுத்து அரித்துவிடும் தன்மையது. நாளடைவில் குடலில் அல்சர் நோய் ஏற்படக்கூடும் என்ற மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

மாவுப்பொருள்கள் எளிதில் செரிமானமாகிவிடும். அதனால் தான் நார் சத்து நிறைந்த பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்றும் அவை தெரிவிக்கின்றன. நார் சத்து நிறை உணவுகள் மெல்ல செரிமானம் ஆவதால் நீண்ட நேரம் நமக்குப் பசிக்காது.  அதனால்தான் உடைத்த தானியங்களையும் நார் சத்து நிறைந்த காய் பழங்களையும் உண்பது நன்று.
வெள்ளை அரிசி, வெள்ளைச்சீனி, வெள்ளை மாவு மூன்றும் நம்மை விரைவில் கொள்ளும் மும்மலங்கள்.

காந்தியடிகள் கூறிய தீட்டாத அரிசியும் வேர்கடலையும் வெல்லமும் நன்றே! மைதாவில் செய்யப்படும் பரோட்டா உங்களை புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை.

Thursday 6 April 2017

இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா கற்றாழையில்?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக  வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
 

 
தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல்  போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
 
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை  மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.  எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும்  பயன் படுத்தப்படுகிறது. 
 
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை  எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை  துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு  பல நன்மைகளும் கிடைக்கும்.
 
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச்  சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு  படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
 
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு  போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில்  வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். 
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை  மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை; ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.




பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
 
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான  நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.
 
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
 
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி  தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
 
 
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை  சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட  மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்  சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.