Tuesday 18 October 2016

முருங்கை இலையின் இந்த அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பாட்டி வைத்தியங்களில் இருந்து பாக்கியராஜ் படங்கள் வரை முருங்கையின் நன்மைகள் கூறப்படாத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். முருங்கை காய் மட்டும் இன்றி, முருங்கை பூ, முருங்கை இலையிலும் பல அற்புத நன்மைகள் புதைந்திருக்கின்றன. 
 
 
 
 பாட்டி வைத்தியங்களில் மட்டும் இருந்து முருங்கையின் நன்மைகளை இப்போது உலக மருத்துவ ஆய்வாளர்களும் கண்டு வியக்கின்றனர். பார்மசி மற்றும் மருந்து அறிவியல் பத்திரிக்கையில் வந்த ஆய்வறிக்கையில், முருங்கை இலைகள் ஆண்மை அதிகரிக்கவும், தாம்பத்திய செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பெருமளவு உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்மை அதிகரிக்க மட்டுமல்ல, உடல் நலத்தை மேம்படுத்த பல அற்புத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது முருங்கை இலைகள்... 
 
நீரிழிவு!
முருங்கை இல்லை உடலில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு குறைக்கவும், கொலஸ்ட்ரால் குறைக்கவும் முருங்கை இலையை உணவில் சேர்த்து வரலாம். 
 
இதயம்! 
இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது முருங்கை இலைகள். இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நலன் மேலோங்க உதவுகிறது. மேலும், தமனிகள், இரத்த குழாய்கள் வலுவையும் அதிகரிக்கிறது. 
 
மூளை!
முருங்கை இலைகள் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் நியூரோவை மேம்படுத்தி, அதன் ஆக்டிவிட்டிகளுக்கு ஊக்கமளிக்கிறது. அல்சைமர் பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை இலைகள் நல்ல தீர்வளிக்க வல்லது. 
 
கல்லீரல்!
 முருங்கை இலைகள் கல்லீரலை பாதுகாத்து, அதில் நச்சுக்கள் அதிகம் சேராமலும், அதிக அழுத்தம் உண்டாகாமலும் காத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.
 
 எப்படி உட்கொள்ளலாம்! 
முருங்கை இலைகளை நீங்கள் உணவில் சேர்த்து உண்ணலாம், வேக வைத்து சாப்பிடலாம், அல்லது அதை காய வைத்து அரைத்து பானமாக, டீயாக பருகலாம். முருங்கை இலைகள், உடலில் இருந்து நச்சுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலோங்க வைக்கிறது. 
 
இதர நன்மைகள்! 
முருங்கை இலைகள் வாந்தி, மலமிளக்க பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்க வல்லது. முருங்கை ஈர் பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கிறது. மேலும், சரியாக சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்தால், அதை பெருக்க உதவுகிறது.

Monday 17 October 2016

2 கப் பால் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.



இதனால் தினமும் இருவேளை பாலை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் ஒரு கப், இரவு ஒரு கப் வீதம் அருந்தலாம். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. 

இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இப்படி எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதிற்கு மேல் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். 

மேலும் கால்சியம் உடலின் இதர செயல்பாடுகளான தசை சுருக்கம், இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் முக்கியமானது. பாலில் பொட்டாசியம் உள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். இச்சத்தும் தசைகளின் சுருக்கத்திற்கு அவசியமானது.

பாலில் ஏராளமான அளவில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு வேண்டிய 9 வகையான அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் உண்பதைத் தவிர்க்கலாம்.

பலரும் பாலை அதிகம் குடித்தால், அதில் உள்ள கால்சியம் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட பாலை தினமும் குடித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பெருங்குடலை சுத்தம் செய்ய சில இயற்கை வழிமுறைகள்!!!!

வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதி… பெருங்குடல். இந்தப் பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான்.





பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
சில நேரத்தில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். 
கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சானது மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்டவாடை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்னைகள், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
நீர்
பெருங்குடல் சுத்தம், நீங்கள் செய்ய சிறந்த வழி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது இயற்கையான முறையில் உடலில் இருந்து தீங்கு செய்யும் நச்சுகளையும் மற்றும் கழிவுகளையும் வெளியே தள்ளி விடுகிறது.
ஆப்பிள் சாறு
புதிதாக எடுக்கப்பட்ட ஆப்பிள் சாறு பருங்குடலை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும். இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது கல்லீரல் மற்றும் செரிமானத்தையும் சுத்தம் செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் ஆப்பிள் சாறு புதிதாகவும், ஆர்கானிக் ஆப்பிளை தேர்வு செய்வது சிறந்தது. ஆப்பிள் சாறு குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு குவளையில் குடிக்க நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். 
எலுமிச்சை சாறு
எலுமிச்சை ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு நல்லது. எனவே, எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்தம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை சாற்றோடு, கடல் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் கொஞ்சம் தேன் கலந்து. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்பெறமுடியும்.
பச்சை காய்கறி சாறு
புதிய காய்கறி சாறு பல முறை குடிக்க அதாவது பச்சை காய்கறிகள் சாற்றை, குறிப்பதால் நச்சுகளை நீக்க உதவுகிறது. ரெடிமேட் ஜூஸ் குடிப்பதை காட்டிலும் நாம் செய்ய கூடிய சாறு ஆரோக்கியமானதாக இருக்கும்.
நார் சத்து அதிகமுள்ள உணவுகள்
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீங்கு செய்யும் நச்சுகளை பெருங்குடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்கம், மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், நார் அதிகமுள்ள உணவுகளை உணவுக்குழாய் எந்த பிரச்சினையின்றி சத்துக்களை பெற உதவும்.
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளான பட்டாணி, ப்ரோக்கோலி, ஆப்பிள், புதிய காய்கறிகள், புதிய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைய சேர்க்க முடியும். தானியங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அதிக அலவு நார் சத்துக்களை கொண்டிருக்கும்.
தயிர்
தயிர் அஜீரணம், வாய்வு பிரச்சனை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகும்.

Friday 24 June 2016

தினமும் கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்திடும்

கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் ‘சி’ சத்து உள்ள பழம் கொய்யாதான்.


 


கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்… நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான் தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
 
குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும். கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும்.
 
தற்போது உயிரித் தொழில்நுட்ப முறை தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப் உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத் தன்மை மாறுபடும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படும்.
 
இதைத் தவிர்த்து, கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
 
ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இக்குறையை பழங்களும், கீரைகளும் நிவர்த்தி செய்யும். குறிப்பாக கொய்யாப்பழம், ரத்த சோகையை மாற்றும் தன்மை கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ சத்து கொய்யாப் பழத்தில் அதிகம் உள்ளது.
 
குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதிக ரத்த 
அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதயப் படபடப்பையும் கொய்யா போக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.  


 

 
இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். 
 
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன் படுத்த வேண்டும்.
 
1. விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு. 
2. தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். 
 
3. அஜீரண கோளாறு அகன்று, எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். 
 
4. குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். 
 
5. இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது. 
 
6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது. 
 
7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது. 
 
8. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது. 
 
9. இதில் அதிகம் நீர்சத்து இருபதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். 
 
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
 
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. 
 
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது.
 
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
 
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.
 
இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

Monday 30 May 2016

அல்சர் நோய்க்கு அற்புதமான மருந்து தேன்

பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது தேன். பயன் தரும் தேனை தக்கவாறு உபயோகித்து பலன் பெறுவோம்.


 
 
1. தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
 
2. எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குறையும்.
 
3. தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
 
4. இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும், பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித்தொல்லை குறையும்.
 
5. தேனையும், மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 
6. தேனுடன், சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
 
7. மீன் எண்ணெய்யோடு, தேனை கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.
 
8. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கீல் வாதம் போகும்.
 
9. வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும்.
 
10. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

முடிவளர்ச்சியை வேகப்படுத்தும் நெல்லிக்காய்

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.


 
 
1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
 
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
 
3. நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
 
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
 
5. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
6. நெல்லிக்காய் தலைமுடி உதிராமல், வளரவும், நரைமுடி தேன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
 
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
 
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

இரத்தத்தை சுத்தமாக வைக்க உதவும் உணவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.


 


அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
 
* உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள * இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 
 
* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
 
* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
 
* நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
 
* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
 
* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
 
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
 
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
 
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்

பாதாமில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


 
 
பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.
 
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
 
மருத்துவ பயன்கள்
பாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்
 
மருத்துவ குணங்கள்
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58  சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம். 
 
எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து  பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
 
நரம்பு தளர்ச்சி
பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும்  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது
 
மூளையை பலப்படுத்தும்
வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.  படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
 
சத்துக்கள்
பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள். 
 
சரும ஆரோக்கியம்
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Monday 23 May 2016

உணவில் உப்பு பற்றாக்குறையா? இருதய நோய் ஏற்படும் ஆபத்து

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளிலிருந்து உப்புச் செறிவு குறைவான உணவுகள் அனைவருக்கும் நன்மையை தராமல் போகலாம்.



அத்துடன் இருதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம், இறப்புகளை கூட ஏற்படுத்தலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சி 49 நாடுகளிலிருந்து, கிட்டத்தட்ட 130,000 போர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது சாதாரண குருதியக்கம் உடையவர்களுடன் ஒப்பிடுகையில், உயர் குருதியக்கம் உள்ளவர்களில் சோடியம் ஊட்டலின் அளவுக்கும் இறப்பு, இருதய நோய், இருதய அடிப்பு போன்றவற்றுக்கும் தொடர்புள்ளதா என ஆராயப்பட்டிருந்தது.

ஆனால் முடிவுகளிலிருந்து உயர் குருதியக்கம் உடையவர்களில் மட்டுமல்ல, பொதுவாக குறைவான சோடியம் ஊட்டலானது மாரடைப்பு, இறப்புக்கு வழிவகுக்கலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பாக தலைமை ஆய்வாளர் Andrew Mente கூறுகையில், உயர் குருதி அமுக்கம் உடைவர்களில் குறைவான சோடியம் உள்ளீடானது குருதியமுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என ஆராயவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் குருதியமுக்கத்தில் எந்த வீழ்ச்சியும் காணப்படவில்லை என தெருவித்திருந்தார்.

ஆனால், அதிகமாக சோடியம் உள்ளெடுக்கும், உயர் குருதியமுக்கம் உடையவர்களில் குறைவான சோடியம் ஊட்டலானது குருதியமுக்கத்தை குறைக்க உதவும் என அவர் மேலும் தெருவித்தார்.

கனடாவில் தற்போதைய சோடியம் ஊட்டலானது நாளுக்கு 3.5 - 4 கிராமாக உள்ளது. ஆனால் மொத்த சனத்தொகையும் 2.3 கிராமுக்கு உட்பட்டதாக நுகர கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் இப் புதிய ஆய்வானது, சோடிய ஊட்டல் நாளுக்கு 3 கிராமிலும் குறைவானவர்களில் மேற்படி நோய் நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என உறுதிப்படுத்தியுள்ளது.

Monday 28 March 2016

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

அனைத்து வகை மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பலரும் வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை வாங்க மறுப்போம். 
 
 
 
உண்மையில் வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு அவை நன்கு கனிந்திருப்பது தான் காரணம். மேலும் சாதாரண வாழைப்பழங்களை விட, இம்மாதிரியான கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதால் ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இங்கு கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
 
புற்றுநோயைத் தடுக்கும் 
ஆய்வுகளில் கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழத்தில் TNF என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.


அல்சர் குணமாகும் 
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்றில் உள்ள புண் குணமாகி, உண்ட உணவு எளிதாக செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
 
இரத்த சோகை 
வாழைப்பழங்களில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் இரும்புச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.
 
மாதவிடாய் வலிகள் 
கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை பெண்கள் உட்கொண்டு வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புக்கள் தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும்.
 
நெஞ்செரிச்சல் குணமாகும் 
வாழைப்பழங்கள் ஓர் சிறந்த இயற்கையான ஆன்டாசிட்டுகள். இது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம், எளிதில் செரிமானம் நடைபெற்று வயிற்று பிரச்சனைகள் குணமாகும். மேலும் இந்த வாழைப்பழங்கள் நெஞ்செரிச்சலில் இருந்தும் உடனடி நிவாரணம் தரும்.
 
இரத்த அழுத்தம் சீராகும் 
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

மன அழுத்தம் குறையும் 
வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. உடல் இந்த அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி செரடோனினை உற்பத்தி செய்யும். செரடோனின் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். 
 
மலச்சிக்கல் நீங்கும் 
பொதுவாக வாழைப்பழங்கள் மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் நார்ச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் தரும். எனவே அடுத்த முறை உங்களுக்கு மலச்சிக்கல் வந்தால், கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
 
உடல் ஆற்றலை அதிகரிக்கும் 
வாழைப்பழங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது தசைப்பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் உள்ள இதர கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுவுடன் வைத்துக் கொள்ளும்.



 

Sunday 27 March 2016

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

டாக்டர் ஜி. ஜான்சன்

  நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை.

பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை நோய்களைப் பரப்புபவை . இதுபோன்று கிருமிகள் மில்லியன் கணக்கில் மனித உடலைத் தாக்கியவண்ணம் உள்ளன .
என்ன? இவ்வளவு கிருமிகள் தாக்குகின்றனவா ? ஏதும் தெரியலையே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இவற்றை நுண்ணோக்கி மூலமே காணலாம். அதிலும் வைரஸ் கிருமிகளை மின் நுண்ணோக்கி ( Electron Microscope ) மூலமே காணமுடியும்.

இந்த கிருமிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கும் பணியில் தோல், வியர்வை, எச்சில், சளி , கண்ணீர் , ரோமம் , சுரப்பிகள், அமிலங்கள் போன்றவை செயல் படுகின்றன.
ஆனால் இவற்றையும் மீறி நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிட்டால், அவற்றை உடன் தாக்கும் செயலில் நமது எதிர்ப்புச் சக்தி செயலில் இறங்குகிறது .

எதிர்ப்புச் சக்தி பலம் மிக்கதாய் இருப்பின் நோய் தானாக ஒரு சில நாட்களில் குணமாகி விடுகிறது.

நோய்க் கிருமிகள் எதிர்ப்புச் சக்தியையும் மீறி தாக்கினால் நோய் நீடித்து ஆபத்தை விளைவிக்கிறது.

ஆகவே எதிர்ப்புச் சக்தியின் முக்கியமான பங்கு நோய்க் கிருமிகளை அகற்றுவதும் அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுமாகும்.

இவ்வாறு எதிர்ப்புச் சக்தியை உண்டுபண்ணும் உறுப்புகள் உடலின் சில பகுதிகளில் உள்ளன. அவை வருமாறு:

* லிம்ப் கட்டிகள் – கரலைக் கட்டிகள் ( Lymph Glands ) – லிம்ப் என்பது பால் போன்ற திரவம். இதில் வெள்ளை இரத்த செல்கள் , புரோதம் , கொழுப்பு உள்ளது. உடலின் திசுக்களை நனைப்பதற்க்கு இது உதவுகிறது. எதிர்ப்பு சக்தியில் இது முக்கிய பங்கு ஆற்றுகிறது.
லிம்ப் கட்டிகள் சிறு சிறு உருளைக் கட்டிகள் . கழுத்து, அக்குள், வயிறு, தொடை ஆகிய பகுதியில் இவை உள்ளன. இவற்றிலுள்ள வெள்ளை இரத்த செல்கள் நோய்க் கிருமிகளைக் கொன்று குவிக்கின்றன. அப்போது இவை வீக்கமுற்று காணப்படும். இதையே நெறி கட்டியுள்ளது என்கிறோம்.

* இரத்தக் குழாய்கள் – இவை வெள்ளை இரத்தச் செல்களையும், எண்ட்டிபாடீஸ் எனும் நோய் எதிர்ப்புத் தன்மைகளையும் ,இதர தற்காப்பு சுரப்பிகளின் இயக்கு நீரையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுகின்றன .

* எலும்பு மூளைச் சதை ( Bone Marrow ) – இவற்றில் வெள்ளை இரத்த செல்கள் உருவாகின்றன. இவற்றில் சில கிருமிகளைக் கொல்கின்றன( killer cells ). இவை கிருமிகளை விழுங்கி அவற்றைக் கொல்கின்றன ( phagocytes )

* தொண்டைச் சதை ( Tonsils ) -இவை தொண்டையின் இரு பக்கமும் உள்ளன. சுவாச உறுப்புகளில் நோய்க் கிருமிகள் புகாமல் இவை தடுக்கின்றன. அதிகமான தொற்று உண்டானால் இவை வீக்கமுற்று வலிக்கும்.

* தைமஸ் சுரப்பி ( Thymus ) – இது எதிர்ப்புச் சக்தியின் முக்கிய உறுப்பாகும். இது நெஞ்சின் மேல்பகுதியில் சுவாசக் குழாயைச் சுற்றி உள்ளது. வெள்ளை இரத்த செல்களை டீ-வெள்ளை செல்களாக ( T- Lymphocytes ) இது மாற்றுகிறது. இந்த டீ – வெள்ளை செல்கள் நோய்க் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கின்றன.

* மண்ணீரல் ( Spleen ) – இது வயிற்றின் இடது பக்கம் மேல்பகுதியில் உள்ளது. லிம்ப் கட்டியான இது பெரிய உறுப்பாகும். இது இரண்டு விதத்தில் பயன்படுகிறது. எண்ட்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சாதனத்தையும், வெள்ளை இரத்த செல்யும் உற்பத்தி செய்கிறது. பழைய சிவப்பு இரத்த செல்களிலிருந்த இரும்பு சத்தை பிரித்து எடுத்து அதை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது.

மேற் குறிப்பிட்டுள்ள அனைத்துமே உடல் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய அங்கங்கள்.
எதிர்ப்புச் சக்தியில் உண்டாகும் குறைபாட்டினால் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. எதிர்ப்புச் சக்தி சமநிலையில் இருத்தல் அவசியம். அது கூடினாலும் குறைந்தாலும் பிரச்னைததான்!

அவற்றில் சில முக்கிய உதாரணங்கள் வருமாறு : ( வேறு வழியின்றி சிலவற்றை ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். இவை நோய்களின் பெயர்கள். கட்டாய மொழி பெயர்ப்பு தேவையில்லை என்றே கருதுகிறேன் )

1. எதிர்ப்புச் சக்தி அதிவேகமாக செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள் ( overactive immune disorders )

* ஒவ்வாமை ( allergy )
* ஆஸ்த்மா ( asthma )
* அரிப்பும் தடிப்பும் ( urticaria )
* சொரி ( eczema )
* மூக்கு அழற்சி ( rhinitis )
* சுய எதிர்ப்பு நோய்கள் ( autoimmune diseases ) – இவை வினோத வகையில் உண்டாகும்

நோய்கள்! உடலின் எதிர்ப்பு சக்தி தனது கைவரிசையை தவராக உடலின் உறுப்புகள் மீதே பிரயோகிப்பதால் இவை உண்டாகின்றன! அதனால் இவற்றைக் குணப்படுவதும் சிரமமாகிறது! இத்தகைய விசித்திர நோய்கள் வருமாறு:

* முதல் ரக நீரிழிவு நோய் ( Type 1 Diabetes )
* சோரியாசிஸ் ( Psoriasis )
* ருமேட்டைட் மூட்டு அழற்சி ( Rheumatoid Arthritis )
* ஸ்கிலிரோடெர்மா ( Scleroderma )
* ஐ. டி . பி . ( I.T.P. )
* அழற்சி நோய்கள்
* Fibromyalgia
* Irritable Bowel Syndrome
* Ulcerative Colitis
* Crohn’s Disease
* Celial Disease

2 . எதிர்ப்புச் சக்தி குறைவாகச் செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள். ( Underactive Immune Disorders )

* நோய்த் தோற்று
* புற்றுநோய்
* காசநோய்
* எச். ஐ. வி.
* ஹெப்பட்டைட்டிஸ் B & C
* சைனுசைட்டிஸ்
* சளி – காய்ச்சல்

எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் செயல்பட்டாலும், அல்லது குறைவாகச் செயல்பட்டாலும் வியாதிகள் உண்டாகின்றன என்பதை அறிந்தோம். ஆகவே உடலின் எதிர்ப்புச் சக்தியை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதை எவ்வாறு உடலுக்குத் தேவையான அளவில் சமநிலையில் வைத்திருப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Sunday 7 February 2016

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும். குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.


 

 
உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.
 
உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
உருளைக்கிழங்கு அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி. இதில் சிறுநீரகத்தை சீராக இயக்கும் சக்தி உள்ளது.
 
காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
 
வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும்.
 
இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.
 
குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
 
உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.
 
குறிப்பு: வாய்வு தொல்லை உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.

Thursday 21 January 2016

கொழுப்பால் உண்டாகும் இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்

வெங்காயத்தாளில் உள்ள அதிகளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.



சத்துக்கள்: வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.

மருத்துவ பயன்கள்:
  • வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
  • வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
    வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
  • வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
    வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது, இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
    வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
    இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  • மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது.
  • இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.