Wednesday 22 November 2017

உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்!

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு எனர்ஜிகள் தான் உங்கள் வெற்றி, தோல்வியை தீர்மானம் செய்கின்றன.


நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி இருக்கிறது. திடீரென நீங்கள் சில சாதாரண விஷயங்களை மிக தவறாக யூகிக்க துவங்குவீர்கள்.
ஏன் சோர்வாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கு உங்களிடமே காரணம் இருக்காது. "ஏன்னு தெரியல, ஒரு மாதிரி இருக்கு..." என உங்களை சுற்றி இருப்பவரிடம் கூறிக் கொண்டே இருப்பீர்கள்.
நெகடிவ் எனர்ஜியை குறைத்து, பாசிடிவ் எனர்ஜியை பெற தான் கோவிலில் செப்பு தகுடுகள் பதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி எனப்படும் கெட்ட சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? இதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது...

வரவு, செலவு!

உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுவாகும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு கண்டுகொண்டிருக்கும். பண வரவு செலவில் தடங்கல்கள் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் வர வேண்டிய பணமும் வராது. உங்களை சுற்றி தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

கையறுநிலை!

எப்போதுமே கையில் எதுமே இல்லை என்ற நிலை இருக்கும். நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுவீர்கள். அன்றாட வாழ்வில் ரோலர் கோஸ்டர் போல நிலை மேலும், கீழுமாய் தொங்கிக் கொண்டிருக்கும். நிம்மதியான உறக்கம் இன்றி காணப்படுவீர்கள்.

அழுத்தம்!

உங்களது அன்றாட வேலைகளில் கூட கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் ஒரு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அவ்வேலை தவறான பாதையில் திரும்புவது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இவையெல்லாம் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருப்பதை வெளிபடுத்தும் அறிகுறிகளாகும்.

தொற்று!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு ஏற்படும். இதனால் மிக எளிதாக நோய் தொற்று பரவும். சாதாரண காலநிலையில் கூட உங்கள் உடல்நல ஆரோக்கியம் சீர்கெடலாம். இயல்பாக உடல்நலம் குன்றும் போது நீங்கள் காணும் சோர்வை காட்டிலும், அதிக சோர்வு தென்படும்.

தொடர்பு!

காரணமே இன்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் மீது நெருக்கமான அன்பு கொண்டுள்ளவர்கள் கூட, உங்கள் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமல் அதை பெரிதுப்படுத்தி மனம் புண்படும்படி பேசுவார்கள். இதனால் தேவையற்ற சண்டை, பிரச்சனைகள் கூட உருவாகலாம்.

உறக்கம்!

உங்கள் உறக்கம் கெடும். வித்தியாசமான கனவுகள் வரும். அடிக்கடி இரவில் விழிப்பு வரும். உங்கள் வாழ்க்கை கடினமாவது போன்ற உணர்வு தென்படும். உறக்கத்தின் போது, உங்கள் ஆழ்மனம் உங்களிடம் எதையோ தெரிவிக்க, எச்சரிக்க தூண்டும். எதோ தவறாக செல்கிறது என்ற உணர்வு உங்கள் மனதினுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.

மறதி!

சாவி, பணம், பர்ஸ், உடை என அன்றாட வாழ்வில் மிக சாதாராணமான விஷயங்களை கூட நீங்கள் மறக்க ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சூழலும் ஏற்படலாம். உங்கள் கண் முன்னேவே இருந்தாலும், வேறு இடங்களில் தேடி, உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்.

ஒருநிலைப்படுத்துதல்!



இதற்கான தீர்வு, நீங்கள் முதலில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்கள் மனதின் கவனம் சிதறுவது தான் ஏனைய அத்தனை பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. தினமும் தியானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரியாக பிரித்து, ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயற்படுங்கள்.

பொறுமை!

யார் உங்களை வேகப்படுத்தினாலும், கோபப்படுத்தினாலும் அதை மனதிற்குள் ஏற்றாமல். பொறுமையாக செயற்பட துவங்குங்கள். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், உங்கள் பொறுமையை இழக்கு செய்துதான் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும். எனவே, பொறுமை மிகவும் முக்கியம்.

அன்பு!

முக்கியமாக அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதே நீங்கள் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலை கட்டுக்கொள் கொண்டு வந்துவிட்டாலே உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளை எளிதாக வீழ்த்தி விடலாம்.
மேலும், கெட்ட சக்தியின் பிடியில் நீங்கள் அகப்படும் போது, அது முதலில் உங்கள் உறவுகளை தான் கொல்லும். எனவே, அதனால் உங்கள் உறவுகள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இது, நீங்கள் எளிதாக கெட்ட சக்திகளின் படியில் இருந்து வெளிவர உதவும்.

வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள்



சிறுநீர் அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.


 
முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே  கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
 
உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப்  போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
 
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள்  கரைந்துவிடும்.
 
புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து  விடுகிறது.
 
வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம்  சேர்ப்பது அவசியம்.
 
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து  வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம்  மறையும்.
 
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்  தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
 
கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில்  சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
 
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர  நுரையீரல் சுத்தமாகும்.

திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.



இவைத்தவிர பொஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். மேலும் வயிற்றுப்புண், மல்ச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல்,  வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் ரத்தத்தில் குளுகோஸ் அலவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை  தடுக்கும்.
 
பித்தம் தணியும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்., நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மர்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு திராட்சை அருமருந்தாகும். ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.
 
மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட  இது சிறந்த மருந்தாகிறது. குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.  அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.
 
தினமும் திராட்சை சாரு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.  பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை சீராக மாற்றும்., மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது.
 
திராட்சை பழத்தில் பெண்களுக்கு செரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. என்வே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
 
இதய பலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது. பாலுணர்வை தூண்டுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.
 
அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில்  திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது.