Saturday 17 October 2015

புற்றுநோயை விரட்டும் மாம்பழம்

பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர்.

 

மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது.

இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சியில் புற்று நோய் பாத்தித்த சுண்டெலிக்கு மாங்காய் கொடுத்து ஆராய்ந்த பொழுது அதன் புற்று நோய் கட்டிகளில் மிகுந்த மற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் கட்டிகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு காரணம் மாங்காய் மற்றும் மாம்பழத்தில் உள்ள லூபியோல் என்ற வேதிப்பொருள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த லூபியோல் புற்றுநோய்க்கு எதிராக மட்டுமில்லாமல் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கும் தீர்வாக உள்ளது.

மாங்காய் மற்றும் மாம்பழத்தின் புற்று நோய்க்கு எதிரான இந்த குணம் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுக்கு தங்கள் ஆராய்ச்சியில் ஒரு புத்துணர்ச்சியாக அமையும்.

No comments:

Post a Comment