Sunday 13 May 2018

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் !!

👉 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு சாப்பிடுங்கள்.
 
👉 நமது வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான செரிமான அமிலங்கள் உள்ளது. இந்த செரிமான அமிலங்கள் நாம் உண்ணும் உணவை செரிக்க வைப்பதற்கு உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். எச்சிலானது உணவை உடைப்பதற்கான என்சைம்களை சுரக்க உதவுகிறது. 
 
👉 ஆனால், நாம் உணவுடன் தண்ணீர் அருந்துவதால் இந்த செரிமான அமிலங்கள் நீர்த்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
 
👉 சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரை குடித்து வரலாம். அவ்வாறு சாப்பிடும் முன்பாக வெந்நீரைக் குடிப்பதால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
 
👉 சப்பாத்தி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது போன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 
 
👉 எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 
 
👉 சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பு மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிக்கலாம். ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment