நம் உடலில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு உறுப்புகளையும் சரியான முறையில் பராமரித்து வந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
இதற்கு
நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான
சத்துக்கள் எந்தெந்த காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது என்று தெரிவு செய்து
சாப்பிட வேண்டும்.
மூளை
வால்நட் என்றாலே அது மூளைக்கான உணவாகும், தினமும் இரண்டு மூன்று அக்ரூட்
சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம்
கட்டுக்குள் இருக்கும்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும்,
சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி
செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று
வால்நட்.
கண்
கேரட், பாதாம், கீரைகள், பச்சை மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய்,
பப்பாளி, முட்டை, முழு தானியங்கள், ஆரஞ்சு நிற காய்கறி மற்றும் பழங்கள்
போன்றவை கண்களுக்கு உகந்தவையாகும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை
(Macular degeneration) தடுக்கும்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச்
செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின்
வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய
சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன.
காது
காளான், அன்னாசி, கேழ்வரகு, கீரைகள், வாழை, முழு தானியங்கள் போன்றவை காதுகளுக்கு உகந்தவையாகும்.
காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர
வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில்
வைட்டமின் டி, டி3, டி2 சத்துக்கள் நிறைந்துள்ளன.
வயிறு
வாழைப்பழம், பப்பாளி, மோர், ஆப்பிள், பட்டை வெங்காயத்தாள், இஞ்சி போன்றவை வயிற்றுக்கான உணவுகள் ஆகும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin)
நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு
நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச்
சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும்.
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்சனை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி
அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ
தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சனைகள் தீரும்.
இதயம்
தக்காளி, மாதுளை, பப்பாளி, கொய்யா, தர்பூசணி மற்றும் நல்லெண்ணெய் போன்றவை இதயத்திற்கு உகந்த உணவுகளாகும்.
லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு
நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து,
இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது.
கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது.
லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும்
ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதி செய்திருக்கின்றன.