Friday, 17 October 2014

மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !!

தமிழர்களின் ஆன்மீகத்திலும், உணவிலும், மருத்துவத்திலும் மஞ்சளுக்கு என ஒரு மகத்தான இடம் உண்டு. மஞ்சளில் குர்க்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. 




மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. 

முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.

இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும்.

மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான்.

ஆன்மீகத்தில் மஞ்சள் : 

புதிதாக ஒரு வீட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை சாமி படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.

புத்தாடை அணியும் முன் அதில் சிறிதளவு மஞ்சள் வைத்து அணிவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால், நோய் கிருமிகள் நம்மை அண்டாது. 

பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவார்கள்.

திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளித்து விளையாடுவார்கள்.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

ஆரோக்கிய வாழ்விற்கும், அழகான சருமத்திற்கும் :

பொதுவாக இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 

மஞ்சள் ஒரு இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் பயன்படுத்தப் படுகிறது. 

நீண்ட காலமாகவே தமிழக பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.

மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. 

மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.

சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். 

கால்களில் உள்ள வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.  

மஞ்சள் பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. 

நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. 

மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். 


சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றின் மேல் பூசினால், நோய் தீரும். 

பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. 

விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். 

மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  

மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். 

என்ன வாசகர்களே, மஞ்சளின் மருத்துவ குணம் பற்றி இப்போது தெரிந்து கொண்டீர்களா.... இனியாவது மஞ்சள் பயன்பாட்டை அதிகரியுங்கள்.... ஆரோக்கியமாகவும், அழகாகவும் வாழுங்கள்....  

முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ?

இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரை முதுகு வலி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, முதுகு வலிக்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பற்றி விரிவாக காண்போம்... 



முதுகெலும்பின் தோற்றமும், அதன் கட்டமைப்பும் : 

முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். 

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (Servaical), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (Thoracic), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (Lumbar), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (Sacral), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.


இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.

முதுகெலும்பு எந்த வயது வரை வளரும்?  

குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும். 

முதுகெலும்பின் அமைப்பில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?  

பொதுவாக முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?

முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

டிஸ்க் ப்ரொலாப்ஸ்(Disk Prolapse): முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்(Spondylosis): வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்(Osteoporosis): உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்(Spondylolisthesis): முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்(Arthritis): மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

முதுகுவலி குறித்து அன்றாடம் எழும் கேள்விகளும், அதற்கான பதில்களும் :

பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?

பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். 

இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

இரு சக்கர வாகனத்தில், மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் செல்வதால் முதுகுவலி ஏற்படுமா? 

முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும். 

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?

முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?

பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட த்ர்க்ஷ 9000(DRX 9000) என்ற கருவி முதுகுவலிக்கும், த்ர்க்ஷ 9000ஸீ என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.


Thursday, 16 October 2014

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்க ாயம் வெறு ம் உணவு ப் பண்டம ாக மட்டு மின் றி அற்பு தமான மருத் துவ ஆற்ற ல் படைத ்த ஒரு  பண்டம ாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள்  உள்ளன. 


வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து  நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர்.
பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய  பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது  வழக்கமாம்.  
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம்  எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும்  வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து  சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம்.
முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச்  சாப்பிடலாம்.


உடல் பருமனைக் குறைக்க

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத்  தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல்  அழகு  ஏற்படுகிறது.
உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம்  உதவுகிறது.

உஷ்ணக் கடுப்பு அகல

பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது.
நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க  உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலி
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடி

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு  வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருக

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.
ஆகவே தினமும்  வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது.  வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும்.
அந்தக் குறைபாட்டை  அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில்  நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

Friday, 20 July 2012

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!




தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். அதிலும் பிரௌன் பிரட்டானது கம்பு அல்லது கோதுமையால் ஆனது. மேலும் அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே இது ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இந்த பிரௌன் பிரட்டை வாங்கும் போது நன்கு தரமானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் சில பிரௌன் பிரட்கள் செயற்கை வண்ணங்களாலும் பிரௌனாக நிறமூட்டப்பட்டிருக்கும். சரி, இப்போது அந்த பிரௌன் பிரட்டை சாப்பிட்டால் அப்படி என்ன உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்ப்போமா!!!

முழு தானியங்கள் : பிரௌன் பிரட்டை செய்யப் பயன்படுத்தப்படும் தானியங்கள் சுத்தகரிக்கப்படாதது என்பதால் அது பிரௌன் நிறத்தில் உள்ளது. மேலும் அதில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அதை செய்யப் பயன்படுத்தப்படும் தானியத்தில் இருக்கும் எந்த ஒரு பகுதியையும் நீக்காமல் தயாரிப்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். மேலும் அதில் வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை உண்டால் செரிமானமும் எளிதாக நடைபெறும். மேலும் இது டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். அதனால் உடலானது ஸ்லிம் ஆவதோடு, உடலுக்கு தேவையான அளவு மட்டும் கொழுப்புகளும் கிடைக்கும். ஆகவே ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க, இதனை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள் : சாதாரண பிரட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களை நிரப்புகின்றனர். ஆனால் அப்போது நார்ச்சத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால் இந்த பிரௌன் பிரட்டில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே போதிய அளவு பிரேளன் பிரட் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பதோடு, வயிற்றுக்கும் போதிய உணவு கிடைத்த நிம்மதியும் இருக்கும். மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் பராமரித்து வரும். அதுமட்டுமல்லாமல் இதனை உண்பதால் மாரடைப்பு ஏற்படுவதும் குறையும் என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலம் இந்த பிரௌன் பிரட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளும்.

பிரௌன் பிரட்டானது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் அதனை உண்ணும் போது அளவுக்க அதிகமாகவும் உண்ணக் கூடாது. ஏனென்றால் அதில் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே குறைந்த அளவு உண்டால் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கலாம். பிரௌன் பிரட் வெள்ளை பிரட்டை விட சுவையானது அல்ல தான், ஆனால் ஆரோக்கியமானது.

Sunday, 1 July 2012

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?



என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது.
சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

சோம்பல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்!



மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று, புற்றுநோய். புற்றுநோய்க்கு முற்றும் தடை போட இன்னும் வழிபிறக்கவில்லை என்றபோதும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்று, உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை.
`புகையிலை, மது, புகை' போன்ற பழக்கங்களுக்கும் புற்றுநோயில் முக்கியப் பங்குண்டு என்பது நாம் அறிந்ததே. புற்று நோய் குறித்த `பகீர்' விவரங்கள் இங்கே.
 
செல்வ வளமை, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும். மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் இங்கும் கேன்சர் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டில் உலகளவில் சுமார் ஒன்றே கால் கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு வாக்கில் அப்படியே இரண்டு மடங்காகிவிடும் என்கிறார்கள்.
பதப்படுத்திய அல்லது துரித உணவால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடல் பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம். 2030-ல் இந்தியா, சீனாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்திருக்கும். புகைப்பதைக் குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந து நல்ல பலனைக் கொடுக்கும். முன்பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையைத் தொடங்குவது நல்லது. குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது, தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்று நோய் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிற போதிலும், புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது.
இந்தப் புற்று நோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் காணப்படும் புற்று நோய்களில் 40 சதவீதம், வசதியான வாழ்க்கை முறையை உடைய மேலைநாடுகளில்தான் காணப்படுகிறது.
உண்மையில் இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் 15 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நன்றாக வளர்ந்த நாடுகளில் மார்பகப் புற்று நோய், நுரையீரல், பெருங்குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
வளர்ச்சி அடையாத நாடுகளில் கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் காணப்டுகின்றன. மேற்கண்ட ஏழு வகை புற்று நோய்கள்தான் மொத்த புற்றுநோய்களில் 62 சதவீதமாக உள்ளன.

Wednesday, 9 May 2012

கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்!



அழகுக்காக கூந்தலுக்கு எத்தனையோ வர்ணம் பூசினாலும் கார் கூந்தல்தான் பெண்களுக்கு அழகு என்கின்றனர் நிபுணர்கள். கூந்தலை கருமையாக்க இயற்கையே செம்பருத்தியை அளித்துள்ளது. செப்பருத்தி இலையும், பூக்களும், கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

செம்பருத்தி தைலம்

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

கூந்தல் உதிர்வை தடுக்கும்

கூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள் செம்பருத்தி தைலத்தை பூசலாம். இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.

பொடுகு தொல்லை நீங்கும்

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.